கதையே வாகை சூடும் : 'வீரமே வாகை சூடும்' டிம்பிள் ஹயாதி | இலங்கை மியூசியத்தில் என் படம்: போண்டா மணி நெகிழ்ச்சி | நடிகை துன்புறுத்தல் வழக்கில் மீண்டும் ஜாமினுக்கு விண்ணப்பித்த பல்சர் சுனி | சன்னி லியோன் நிகழ்ச்சி நடைபெற உள்ள இடத்திற்கு அருகே குண்டு வெடித்ததால் பரபரப்பு | 30 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதையுடன் வாணி ஜெயராம் உடல் தகனம் | ஏஜென்ட் ரிலீஸ் தேதி அறிவிப்பு ; அகிலுக்கு வாழ்த்து சொன்ன சமந்தா | சர்ச்சையில் சிக்கிய விஜய்யின் 'லியோ' படத்தின் புரோமோ வீடியோ | நடிகர்களை தலைவர் என்று அழைப்பது நெருடலாக உள்ளது - வெற்றிமாறன் கருத்து | உச்சக்கட்ட மகிழ்ச்சியில் வரலட்சுமி சரத்குமார் | மனவருத்தம் நீங்காமலே மறைந்துவிட்டார் வாணி ஜெயராம் ; இசையமைப்பாளர் கோபி சுந்தர் வருத்தம் |
மழை, திருவிளையாடல் ஆரம்பம், தோரணை, கந்தசாமி, உத்தம புத்திரன், தோழா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன் உள்பட பல படங்களில் நடித்தவர் ஸ்ரேயா சரண். தெலுங்கு, இந்தியில் 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். ஆண்ட்ரூ கொசசேப் என்கிற ரஷியரை திருமணம் செய்து கொண்டு வெளிநாட்டில் வசித்து வருகிறார்.
அவ்வப்போது வந்து தமிழ், தெலுங்கு படங்களில் நடித்துவிட்டு போகிறார். நரகாசுரன், சண்டக்காரி படங்களில் நடித்து முடித்துள்ளார். இந்த நிலையில் அவர் கப்ஜா என்ற பான் இண்டியா படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஒரியா, மராத்தி, ஹிந்தி என 7 மொழிகளில் உருவாகிறது.
கன்னட நடிகர்கள் உபேந்திரா, கிச்சா சுதீப் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்கள். ஆர். சந்துரு இயக்குகிறார். கேஜிஎப் படத்திற்கு இசை அமைத்த ரவி பஸ்ரூர் இசையமைக்கிறார். ஏ.ஜே.ஷெட்டி ஒளிப்பதிவு செய்கிறார். இது ஒரு பேண்டசி படமாகும்.