அடுத்த சிம்பொனி: இளையராஜா அறிவிப்பு | 'மகுடம்' படத்தின் இயக்குனர் ஆனார் விஷால்; அவரே அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் | அட்லி - அல்லு அர்ஜூன் படம் ஒரு சினிமா புரட்சி! ரன்வீர் சிங் வெளியிட்ட தகவல் | 2025ல் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாகும் இறுதி படம் 'தி கேர்ள் ப்ரெண்ட்' | துல்கர் சல்மானின் காந்தா நவம்பர் 14ம் தேதி வெளியாகிறது! | நான் விருது வாங்கினாலும் குப்பை தொட்டியில் தான் போடுவேன்! : விஷால் | முதல் முறையாக முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் சம்யுக்தா! | பிளாஷ்பேக்: தெவிட்டாத திரையிசைப் பாடல்கள் தந்த தித்திக்கும் “தீபாவளி” நினைவுகள் | டேட்டிங் ஆப் மூலம் இரண்டாவது திருமணம் செய்த வசந்த பாலன் பட நாயகி | கதாநாயகன் ஆனார் 'சிறகடிக்க ஆசை' மனோஜ்! |
சூர்யா நடித்துள்ள எதற்கும் துணிந்தவன் படம் நாளை(மார்ச் 10) வெளிவருகிறது. இதனை பாண்டிராஜ் இயக்கி உள்ளார். பிரியங்கா அருள் மோகன், வினய், சத்யராஜ், ராஜ்கிரண், சூரி உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கான புரமோசன் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கேரளா சென்ற சூர்யா, அங்கு பிரபல நடிகை கடத்தப்பட்டு, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் குறித்து பேசி உள்ளார்.
"இப்படி ஒரு கொடுமை யாருக்கும் நடந்திருக்கக் கூடாது. இது நியாயமற்ற செயல். நவீனமான உலகத்தில் இந்த மாதிரியான விஷயங்கள் நடக்கவே கூடாது. அதை நினைக்கும் போது மனசு வலிக்கிறது” என பேசியுள்ளார்.
எதற்கும் துணிந்தவன் படமும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களின் பின்னணில் உருவாகி உள்ள படம் என்று கூறப்படுகிறது. படத்தின் டீசர் மற்றும் டிரைலரும் அதனை உறுதிப்படுத்துகிறது.