25வது நாளில் அடியெடுத்து வைத்த 'டூரிஸ்ட் பேமிலி' | ஹீரோக்களின் உதவியாளர்கள் கதை கேட்பதை முதலில் நிறுத்த வேண்டும் ; ஆர்கே செல்வமணி காட்டம் | தெலுங்கு படத்தில் சூப்பர் ஸ்டார் கதாபாத்திரத்தில் நடிக்கும் உபேந்திரா | எனக்குள் புதிய விடியலை திறந்து விட்ட ஓஷோவின் பேச்சு ; மோகன்லால் | என் விளக்கத்தை அக்ஷய் குமார் படித்தால் பிரச்னை முடிவுக்கு வந்துவிடும் ; படத்திலிருந்து விலகிய நடிகர் பதில் | 'அஞ்சலி' படம் பார்த்து அழுத சிலம்பரசன் | பிரபாஸ் அமைதியானவர் அல்ல, கலகலப்பானவர்! -மாளவிகா மோகனன் | உருவ கேலி செய்தவர்களுக்கு ஐஸ்வர்யா ராய் கொடுத்த பதிலடி! | திரைப்படங்களை திருட்டுப் பதிவிறக்கம் செய்யாதீர்கள்! - நடிகர் சூரி வேண்டுகோள் | மந்தமான வசூலில் விஜய் சேதுபதியின் ‛ஏஸ்' |
தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர் பாலா. வழக்கமான கமர்சியல் படங்களில் இருந்து விலகி மாற்று கதையில் பயணித்து ரசிகர்களை ஈர்க்க வைத்தவர். இன்றைக்கு முன்னணி நடிகர்களாக இருக்கும் விக்ரம், சூர்யா, ஆர்யா உள்ளிட்டோரின் நடிப்பை வெளிக் கொண்டு வந்தவர் பாலா.
கடந்த 2004ம் ஆண்டு தேனியை சேர்ந்த முத்துமலர் என்பவரை பாலா திருமணம் செய்தார். மதுரையில் இவர்களது திருமணம் விமரிசையாக நடைபெற்றது. இவர்களுக்குப் பிரார்த்தனா என்ற மகள் உள்ளார்.
இந்நிலையில் பாலாவின் திருமண வாழ்வில் விரிசல் ஏற்பட்டது. கடந்த சில ஆண்டுகளாக கணவன் - மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். இருவரும் விவாகரத்து கேட்டு கோர்ட்டில் முறையிட்டு இருந்த நிலையில் தற்போது குடும்பநல நீதிமன்றம் இருவருக்கும் விவாகரத்து வழங்கி உள்ளது.