பிளாஷ்பேக்: முத்தான மூன்று சுப்புலக்ஷ்மிகளை வெள்ளித்திரைக்குத் தந்த இயக்குநர் கே சுப்ரமணியம் | மீண்டும் புதிய படங்களில் நடிப்பதற்கு தயாராகும் கியாரா அத்வானி! | விரைவில் கைதி 2 : கார்த்தி கொடுத்த அப்டேட் | ‛வா வாத்தியார்' பட ரிலீசிற்கு தடை நீட்டிப்பு | ரத்னகுமாரின் '29' | ரக்ஷன், ஆயிஷாவின் ‛மொய் விருந்து' : முதல் பார்வை வெளியீடு | பிளாஷ்பேக்: படிக்க வந்த இடத்தில் நடிக்க வாய்ப்பு; “காதலிக்க நேரமில்லை” நாயகன் ஆனார் ரவிச்சந்திரன் | கதையின் நாயகன் ஆன சூரி பட இயக்குனர் | கார்த்திக்கு கதை சொன்ன நானி பட இயக்குனர் | வி சாந்தாராம் பயோபிக்கில் ஜெயஸ்ரீ கதாபாத்திரத்தில் தமன்னா |

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர் பாலா. வழக்கமான கமர்சியல் படங்களில் இருந்து விலகி மாற்று கதையில் பயணித்து ரசிகர்களை ஈர்க்க வைத்தவர். இன்றைக்கு முன்னணி நடிகர்களாக இருக்கும் விக்ரம், சூர்யா, ஆர்யா உள்ளிட்டோரின் நடிப்பை வெளிக் கொண்டு வந்தவர் பாலா.
கடந்த 2004ம் ஆண்டு தேனியை சேர்ந்த முத்துமலர் என்பவரை பாலா திருமணம் செய்தார். மதுரையில் இவர்களது திருமணம் விமரிசையாக நடைபெற்றது. இவர்களுக்குப் பிரார்த்தனா என்ற மகள் உள்ளார்.
இந்நிலையில் பாலாவின் திருமண வாழ்வில் விரிசல் ஏற்பட்டது. கடந்த சில ஆண்டுகளாக கணவன் - மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். இருவரும் விவாகரத்து கேட்டு கோர்ட்டில் முறையிட்டு இருந்த நிலையில் தற்போது குடும்பநல நீதிமன்றம் இருவருக்கும் விவாகரத்து வழங்கி உள்ளது.