Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

என் கண்ணியம் குலைக்கப்பட்டது : மனம் திறந்த பாவனா

07 மார், 2022 - 20:33 IST
எழுத்தின் அளவு:
MY-dignity-was-shredded-:-Bhavana-breaks-silence

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழி படங்களில் பிசியாக நடித்து வந்தவர் மலையாள நடிகை பாவனா. தனக்கு நிகழ்ந்த பாலியல் துன்புறுத்தல் குறித்து பேட்டி ஒன்றில் இப்போது கூறி உள்ளார். அதில், ‛‛அந்த ஒரே நாள் என் வாழ்க்கை ஒட்டு மொத்தமாக மாறியது. எனக்கு ஏன் இப்படி நடக்க வேண்டும் என பலமுறை கேட்டிருக்கிறேன். என்னுடைய மோசமான மிக நீண்ட கனவு இது. அந்த ஒரு நாளில் மீண்டும் சென்று எனக்கு நிகழ்ந்த மோசமான நிகழ்வை தடுத்து நிறுத்தியிருக்க முடியுமா என்று கூட யோசித்திருக்கிறேன். இந்த 5 ஆண்டுகள் என் வாழ்வில் ஏற்பட்ட அனுபவங்கள் மிகவும் கடினமானது.

நான் பாதிக்கப்பட்டவள் அல்ல, வாழ்க்கையில் மீண்டு வந்தவள். இதற்கு முடிவு கிடைக்கும்வரை நான் போராடுவேன். நீதிக்கான போராட்டம் அவ்வளவு எளிதானது அல்ல. வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் அதுபற்றி விரிவாகக் கூறவில்லை. 15 முறை நீதிமன்றத்துக்கு சென்று என்பக்கம் உள்ள நியாயத்தை நிரூபிக்க வழக்கறிஞர்கள் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் பதில் கூறினேன்.

சமூக வலைதளங்களில் எனக்கு எதிராக பேசி என்னை வேதனைப்படுத்தினார்கள். நான் பொய் சொல்வதாகவும் கூறினார். சிலர் என்மீது குற்றம் சொன்னார்கள். மோசமாக வளர்க்கப்பட்டவள் என்று பலரும் சொன்னார்கள். எனக்கு நடந்த கொடுமைக்கு நீதி கேட்டு நான் நீதிமன்றத்திற்கு சென்றதால் மலையாள சினிமா என்னை ஓரங்கட்டியது. இருப்பினும் சிலர் எனக்கு ஆதரவு தந்தார்கள்.

இந்த சம்பவத்தின் மூலம் என்னுடைய கண்ணியம் சுக்குநூறானது. தன்னம்பிக்கையால் தான் நான் தைரியமாக இருந்து வருகிறேன். ஆனாலும் தொடர்ந்து நான் போராடுவேன். என்னுடைய கணவர் மற்றும் குடும்பத்தினர் எனக்கு ஆறுதலாக இருந்தாலும் தனிமையில் இருப்பது போலவே உணர்ந்தேன்.

எனது மரியாதை எனக்குத் திரும்பக் கிடைக்க வேண்டும். தனிப்பட்ட முறையில் இன்னும் நான் பயந்துகொண்டுதான் இருக்கிறேன். அதற்கான பதில் என்னிடம் இல்லை. இன்னும் இந்த சமூகம் பெண்களை வேறுகோணத்தில் பார்க்கிறது. அந்த நிலை மாற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
கருத்துகள் (9) கருத்தைப் பதிவு செய்ய
ஜீவி 2 உருவாகிறதுஜீவி 2 உருவாகிறது ஆயுர்வேத சிகிச்சை முடிந்து படப்பிடிப்புக்கு திரும்பிய விஷால் ஆயுர்வேத சிகிச்சை முடிந்து ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (9)

Muthu Kumar - Manama,பஹ்ரைன்
08 மார், 2022 - 13:34 Report Abuse
Muthu Kumar தப்பு செய்தவன் தூண்டியவன் தண்டிக்க படும் வரை விட்டு விடாதீர்கள்.. நல்லவர்களும் தெய்வமும் உங்களுக்கு துணையாய் வருவார்கள். ஆனால் தீர்வு சுலபமாக கிடைத்து விடாது. இந்த கேடு கேட்ட உலகத்தில்.
Rate this:
ஆக .. - Chennai ,இந்தியா
08 மார், 2022 - 10:24 Report Abuse
ஆக .. கொடுக்கல் வாங்கல் மனஸ்தாபம் ?
Rate this:
sankar - Nellai,இந்தியா
08 மார், 2022 - 08:07 Report Abuse
sankar அதை ஏன் மறுபடியும் மறுபடியும் யோசிக்கிறீங்க. ரோட்ல போகும் பொது சாக்கடைல கால வெச்ச மாதிரி மறந்துடுங்க. அது தான் வாழ்க்கையை சந்தோசமா கொண்டு போக வழி வகை செய்யும். இந்த மீடியா காரங்க எதையும் பெரிசா பண்ணுவாங்க அவங்க விளம்பரத்துக்காக. தப்பு செய்தவன் நிச்சயம் தண்டனை அனுபவிச்ச திறனும்.
Rate this:
08 மார், 2022 - 04:20 Report Abuse
Prasanna Krishnan Chechi we are with you.
Rate this:
ஆக .. - Chennai ,இந்தியா
09 மார், 2022 - 12:58Report Abuse
ஆக ..திஸ் ஐஸ் ஹொவ் ஆல் ஸச் இன்சிடெண்ட்ஸ் ஸ்டார்ட்ஸ்...
Rate this:
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
08 மார், 2022 - 02:14 Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் வெறும் சம்பவம்ன்னு சொல்லாமல் அதில் சம்பந்தப்பட்ட அசிங்கம்பிடிச்சவனுங்க பேரையும் சத்தம் போட்டு சொல்லுங்கள். உலகம் தெரிந்து கொள்ளட்டும். அட ராகவா, இவனான்னு மக்கள் தெரிந்து கொள்ளட்டும்.
Rate this:
sankar - new jersy,யூ.எஸ்.ஏ
08 மார், 2022 - 08:27Report Abuse
sankarஅந்த பயலைத்தான் கைது பண்ணி வெளிய வந்தானே மஞ்சு வாரியார் ...புருஷன் அப்படின்னு நினைக்கிறன்...
Rate this:
N Annamalai - PUDUKKOTTAI,இந்தியா
09 மார், 2022 - 08:18Report Abuse
N Annamalaiஅவர்கள் பெயரை வெளியில் கூறலாம் .உங்களுக்கு என்ன பயம் .பிற பெண்கள் காப்பாற்ற படுவார்கள் .அதற்காக சொல்லவும் .நீதி நிச்சயம் கை கொடுக்காது ....
Rate this:
Sridhar - New Delhi,இந்தியா
09 மார், 2022 - 18:50Report Abuse
Sridharமலையாளம் ஆக்டர் திலிப்....
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in