டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் | காந்தாரா கிராமத்தில் குடியேறுகிறார் ரிஷப் ஷெட்டி | பெண்கள் அரசியல் கூட்டங்களுக்கு செல்லக்கூடாது: அம்பிகா அட்வைஸ் | நயன்தாரா வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் | பிளாஷ்பேக்: மம்பட்டியான் பாணியில் உருவான 'கரிமேடு கருவாயன்' | பிளாஷ்பேக்: தமிழ், பெங்காலியில் உருவான படம் | கார்த்தி நடிக்கும் ‛வா வாத்தியார்' ரிலீஸ் தேதி அறிவிப்பு | தமிழகம் பக்கமே வரலை... ஆனாலும் தமிழில் ஹிட் | பக்தி மயத்தில் கோலிவுட் பார்ட்டிகள் | ‛‛2 ஆயிரம் சம்பளம் கேட்டேன், 4 லட்சம் கொடுத்தார் நட்டி'': சிங்கம்புலி நெகிழ்ச்சி |
பிரபல மலையாள நடிகை காவேரி. தென்னிந்திய மொழிகளில் 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழில் அப்பு, பெண்ணின் மனதை தொட்டு, நினைக்காத நேரமில்லை, காசி, புன்னகை பூவே, கண்ணாடி பூக்கள், கண்ணுக்குள் நிலவு, , சமுத்திரம் குட்டி பிசாசு உள்பட பல படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு இயக்குனர் சூர்ய கிரனை திருமணம் செய்து கொண்ட அவர் தற்போது அவரை விட்டு பிரிந்து விட்டார்.
இந்த நிலையில் காவேரி இயக்குனராகி இருக்கிறார். அவரே தயாரிக்கவும் செய்கிறார். இன்னும் டைட்டில் வைக்காத இந்த படத்தில் சேத்தன் ஹீரோவாக நடிக்கிறார். சுகாசினி மணிரத்னம், சித்தி இட்னானி, ஸ்வேதா, ரோஹித் முரளி உள்பட பலர் நடிக்கின்றனர். ஒளிப்பதிவை ஆல்பி ஆன்டனி மற்றும் சக்தி சரவணன் கையாள, அச்சு ராஜாமணி படத்திற்கு இசையமைக்கிறார்.
இப்படம் காதல் மற்றும் சஸ்பென்ஸ் த்ரில்லர் கதையை மையமாக கொண்டது. படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது. தற்போது படத்தின் பர்ஸ்ட்லுக் வெளியிடப்பட்டுள்ளது. அதில் சேத்தன் நிர்வாணமாக இருக்கும் போட்டோ இடம் பெற்றுள்ளது. பெண் இயக்குனரின் படத்தில் ஆணின் நிர்வாணகாட்சி இடம் பெற்றிருப்பது குறித்து பலருக்கு ஆச்சர்யம் ஏற்பட்டுள்ளது.