ஹீரோவான கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் ராஜேஷ்! விளையாட்டு வீரராக நடிக்கிறார்!! | 'தக்லைப்' படத்தில் எனது கேரக்டர் விமர்சிக்கப்படும்! - திரிஷா வெளியிட்ட தகவல் | கேரளாவில் ஜெயிலர்-2 படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பிய ரஜினி! | முழுக்க முழுக்க புதுமுகங்களை வைத்து படம் இயக்கும் மணிரத்னம்! | மீண்டும் தள்ளிப்போனது 'படை தலைவன்' ரிலீஸ் | 'ஸ்பிரிட்' படத்தை விட்டு வெளியேறிய தீபிகா படுகோனே! | அப்துல் கலாம் வாழ்க்கை வரலாற்றில் தனுஷ் | இலங்கையில் படமாகும் 'மதராஸி' பட கிளைமாக்ஸ்! | கமல் 237வது படத்தின் படப்பிடிப்பு எப்போது? புது தகவல் | சிவகார்த்திகேயன் கேட்டால் நகைச்சுவை வேடத்தில் நடிப்பீர்களா சூரி? சூரியின் பதில் இதோ.. |
நடிகை காஜல் அகர்வால் பிசியாக நடித்துக் கொண்டிருக்கும்போதே தொழிலதிபர் கவுதம் கிச்லுவை திருமணம் செய்து கொண்டார். தற்போது கர்ப்பமாக இருக்கிறார். இதனால் அவர் சில தெலுங்கு படங்களில் இருந்தும், தமிழில் இந்தியன் 2விலிருந்து விடுவிக்கப்பட்டிருக்கிறார்.
இதுகுறித்து காஜல் அகர்வால் கூறியிருப்பதாவது: திருமணம் ஆனபிறகு, நடிகைகள் சினிமாவிலிருந்து விலகும் காலம் தற்போது மாறிவிட்டது. உலகம் முழுவதுமுள்ள சினிமாத் துறைகள் மாறிவிட்டன. நடிகர்கள் எடுக்கும் சொந்த முடிவுகள் அவர்களது சினிமா வாழ்க்கையில் பிரதிபலிப்பதில்லை என்பதை புரிந்துகொள்ளும் அளவுக்கு மக்கள் முதிர்ச்சி அடைந்திருப்பது மகிழ்ச்சி. வாழ்க்கையில் என்ன மாற்றம் ஏற்பட்டாலும் நாம் தொடர்ந்து நம் வேலையை செய்யலாம்.
திருமணத்துக்கு முன்பிருந்தே நான் எனக்கான கதைகளை மிகவும் கவனமாக தேர்வு செய்கிறேன். சமீபகாலமாக எனக்கான கதாபாத்திரங்களையும் நான் கவனமாக தேர்வு செய்து வருகிறேன். எனது சொந்த வாழ்க்கை முடிவுகள் அதில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.
இவ்வாறு காஜல் கூறியுள்ளார்.