14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா |
ராதா கிருஷ்ணகுமார் இயக்கத்தில் பிரபாஸ், பூஜா ஹெக்டே இணைந்து நடித்துள்ள படம் ராதே ஷ்யாம். 300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாராகியுள்ள இந்தப் படம் ஜனவரி 14ம் தேதி திரைக்கு வருவதாக இருந்தது. ஆனால் கொரோனா தொற்று காணமாக ரிலீஸ் தேதி ஒத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் உருவாகியுள்ள ராதே ஷ்யாம் படம் பிப்ரவரி 14ஆம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக சோசியல் மீடியாவில் ஒரு செய்தி வெளியாகி வருகிறது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ செய்தியை சம்பந்தப்பட்ட பட நிறுவனம் வெளியிடவில்லை. என்றாலும் பிரபாஸின் ரசிகர்கள் ராதே ஷ்யாம் படத்தை கண்டிப்பாக தியேட்டரில்தான் வெளியிட வேண்டும். திரையரங்குகளில் பார்த்தால் மட்டுமே படம் திருப்திகரமாக இருக்கும் என்று கருத்து கூறி வருகிறார்கள். இதனிடையே ராதே ஷ்யாம் படம் பெரிய பட்ஜெட்டில் உருவாகி உள்ளதால் அவ்வளவு தொகை கொடுத்து ஓடிடி நிறுவனங்கள் வாங்க முன்வராது. ஆகவே படம் நிச்சயம் தியேட்டரில் தான் வெளியாகும் என்கிறார்கள்.