25வது நாளில் அடியெடுத்து வைத்த 'டூரிஸ்ட் பேமிலி' | ஹீரோக்களின் உதவியாளர்கள் கதை கேட்பதை முதலில் நிறுத்த வேண்டும் ; ஆர்கே செல்வமணி காட்டம் | தெலுங்கு படத்தில் சூப்பர் ஸ்டார் கதாபாத்திரத்தில் நடிக்கும் உபேந்திரா | எனக்குள் புதிய விடியலை திறந்து விட்ட ஓஷோவின் பேச்சு ; மோகன்லால் | என் விளக்கத்தை அக்ஷய் குமார் படித்தால் பிரச்னை முடிவுக்கு வந்துவிடும் ; படத்திலிருந்து விலகிய நடிகர் பதில் | 'அஞ்சலி' படம் பார்த்து அழுத சிலம்பரசன் | பிரபாஸ் அமைதியானவர் அல்ல, கலகலப்பானவர்! -மாளவிகா மோகனன் | உருவ கேலி செய்தவர்களுக்கு ஐஸ்வர்யா ராய் கொடுத்த பதிலடி! | திரைப்படங்களை திருட்டுப் பதிவிறக்கம் செய்யாதீர்கள்! - நடிகர் சூரி வேண்டுகோள் | மந்தமான வசூலில் விஜய் சேதுபதியின் ‛ஏஸ்' |
மாஸ்டர் மகேந்திரன் நடிக்கும் ரிப்புபரி படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார் காவ்யா அறிவுமணி. பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை கேரக்டரில் நடித்து புகழ்பெற்றவர். பாரதி கண்ணம்மா தொடரிலும் நடித்தார். இப்போது சினிமா நடிகை ஆகிவிட்டார்.
படத்தில் நடிப்பது தொடர்பாக அவர் கூறியதாவது: நான் சினிமாவில் நடிக்க ஒப்பந்தமானது வேறொரு படத்தில் ஆனால் ரிப்புபரி எனது முதல் திரைப்படமாக அமைந்து விட்டது. சினிமாவில் நடிக்கும் ஆசையில் இருந்தபோதுதான் பாரதி கண்ணம்மாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது, என்னுடைய கதாபாத்திரம் பிரபலமானதும், பாண்டியன் ஸ்டோர் தொடரில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இப்போது நான் நினைத்த மாதிரி சினிமாவில் நடிக்க ஆரம்பித்திருக்கிறேன்.
நான் சீரியலில் நடிப்பதில் இருந்து முற்றிலும் மாறுட்டதாக இது இருக்கும். கிராமப்புற பின்னணியில் திகில் கலந்த நகைச்சுவை படமாக உருவாகிறது. இரண்டு நண்பர்களின் வாழ்க்கையில் நடக்கும் நிகழ்வுகளைச் சுற்றியே கதைக்களம் அமைந்துள்ளது. நான் மகேந்திரன் ஜோடியாக நடிக்கவில்லை. ஆனாலும் முக்கியமான கேரக்டரில் நடிக்கிறேன். என்றார்.