தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
இயக்குனர் ஷங்கர், தெலுங்கு நடிகர் ராம்சரனை வைத்து இயக்கி வரும் படத்திற்கு ஆர்சி - 15 என தற்காலிகமாக பெயர் வைத்திருக்கிறார்கள். இந்த படத்தில் கியாரா அத்வானி, அஞ்சலி, ஜெயராம், ரகுமான் என பலர் நடிக்க தமன் இசையமைக்கிறார். இந்தப்படத்தின் முதல் இரண்டு கட்ட படப்பிடிப்புகள் முடிந்துவிட்ட நிலையில் தற்போது மூன்றாவது கட்ட படப்பிடிப்பை நடத்த தயாராகி வருகிறார் இயக்குனர் ஷங்கர்.
அரசியல் கலந்த திரில்லர் கதையில் உருவாகிவரும் இந்த படம் ரூ. 170 கோடி பட்ஜெட்டில் தயாராகி வருகிறது. இந்நிலையில் தற்போது இப்படத்தின் சேட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமையை ரூபாய் 200 கோடிக்கு ஜீ நெட்வொர்க் நிறுவனம் வாங்கி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
மேலும், ஷங்கர் ராம் சரண் இணைந்துள்ள இந்தப் படத்தை 2023ம் ஆண்டு சங்கராந்திக்கு வெளியிடுவதற்கு தயாரிப்பாளர் தில் ராஜு திட்டமிட்டிருப்பதாக தற்போது புதிய தகவல் வெளியாகி இருக்கிறது. அப்படி என்றால் அடுத்தாண்டு பொங்கலுக்கு இப்படம் திரைக்கு வருகிறது.