தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
விஜய் டிவியில் வெளியான பிக் பாஸ்- 5 நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களில் பாவனியும் ஒருவர். 100 நாட்களுக்கு மேலாக இவர் பிக்பாஸ் வீட்டில் இருந்து மூன்றாவது இடம் பிடித்தார். மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடந்த ஒரு டாஸ்க்கின் போது, தான் காதலித்து திருமணம் செய்து கொண்ட கணவர் திடீரென தற்கொலை செய்து கொண்டதாக ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டார். அதன்பிறகு ஏற்பட்ட தனது இரண்டாவது காதலும் தோல்வியில் முடிந்தது என்று தெரிவித்திருந்தார்.
அதோடு பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது அமீர் தன்னை காதலிப்பதாக கூறியபோதும் அதை ஏற்றுக் கொள்ளாமல் தவிர்த்து விட்டார் பாவனி. இந்த நிலையில் ரசிகருடன் அவர் உரையாடியபோது, திருமணம் குறித்து ஒரு ரசிகர் கேள்வி கேட்டார். அதற்கு, வாழ்க்கையில் இனி திருமணம் என்பதே இல்லை. எனது முழு கவனமும் நடிப்பில்தான் இருக்கப்போகிறது என்று தெரிவித்துள்ளார்.