பிளாஷ்பேக்: முத்தான மூன்று சுப்புலக்ஷ்மிகளை வெள்ளித்திரைக்குத் தந்த இயக்குநர் கே சுப்ரமணியம் | மீண்டும் புதிய படங்களில் நடிப்பதற்கு தயாராகும் கியாரா அத்வானி! | விரைவில் கைதி 2 : கார்த்தி கொடுத்த அப்டேட் | ‛வா வாத்தியார்' பட ரிலீசிற்கு தடை நீட்டிப்பு | ரத்னகுமாரின் '29' | ரக்ஷன், ஆயிஷாவின் ‛மொய் விருந்து' : முதல் பார்வை வெளியீடு | பிளாஷ்பேக்: படிக்க வந்த இடத்தில் நடிக்க வாய்ப்பு; “காதலிக்க நேரமில்லை” நாயகன் ஆனார் ரவிச்சந்திரன் | கதையின் நாயகன் ஆன சூரி பட இயக்குனர் | கார்த்திக்கு கதை சொன்ன நானி பட இயக்குனர் | வி சாந்தாராம் பயோபிக்கில் ஜெயஸ்ரீ கதாபாத்திரத்தில் தமன்னா |

உலகமே கொரானோ மூன்றாவது அலையால் திண்டாடிக் கொண்டிருக்க நடிகை சமந்தா சுவிட்சர்லாந்து நாட்டிற்கு சுற்றுப் பயணம் சென்றுள்ளர். நேற்று “நாள் 4, மேஜிக் நிகழ்ந்த போது,” என ஒரு பனி மலையில் பனிச்சறுக்கு உடையுடன் ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்திருந்தார். அதன்பின் அவர் பனிச்சறுக்கு செய்யும் வீடியோ ஒன்றையும் பதிவிட்டார்.
அந்த வீடியோ பதிவில் அவர் குறிப்பிட்டுள்ள வார்த்தைகள்தான் யாரைக் குறிக்கிறது என்பது கேள்வியாக எழுகிறது. அதில், “உங்களது ஈகோவை விடுங்கள் என வீட்டில் சொன்னார்கள். உண்மையான வார்த்தைகள் எதுவும் பேசப்படவில்லை, புதிய ஆரம்பம், ஸ்கையிங்” என பதிவிட்டுள்ளார்.
கடந்த பத்து நாட்களாக சமந்தா, நாகசைதன்யா பிரிவு பற்றி மீண்டும் செய்திகளில் அடிபட்டு வருகிறது. நாகசைதன்யா, அவரது அப்பா நாகார்ஜுனா இருவரும் இணைந்து நடித்த 'பங்கார்ராஜு' படத்தின் பிரமோஷன் நிகழ்வுகளில் இருவருமே 'பிரிவு' பற்றி சில விஷயங்களைப் பகிர்ந்திருந்தனர். அவற்றையும் மனதில் வைத்து சமந்தா 'ஈகோ' பற்றிய பதிவைப் பதிவிட்டிருக்கலாமோ ?.