என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
தெலுங்குத் திரையுலகத்தில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்த அல்லு அர்ஜுன், 'புஷ்பா' வெளியீட்டிற்குப் பிறகு பான் - இந்தியா ஸ்டார் ஆகிவிட்டார். அவர் நடித்த தெலுங்குப் படங்கள் ஹிந்தியில் டப்பிங் செய்யப்பட்டு அவை யு டியுபில் பெரும் வரவேற்பைப் பெற்றவையாக இருந்தன. இப்போது 'புஷ்பா' படம் மூலம் அவருக்கு ஹிந்தியிலும் ஒரு மார்க்கெட் உருவாகி உள்ளது.
இந்நிலையில் அல்லு அர்ஜுனின் பல படங்களை ஹிந்தியில் டப்பிங் செய்து யு டியூபில் வெளியிட்ட கோல்ட்மைன்ஸ் டெலிபிலிம்ஸ் நிறுவனம் அல்லு அர்ஜுன் நடித்த 'அலா வைகுந்தபுரம்லோ' படத்தை ஹிந்தியில் டப்பிங் செய்து அடுத்த வாரம் ஜனவரி 26ம் தேதி தியேட்டர்களில் வெளியிடப் போவதாக அறிவித்துள்ளது.
அதே சமயம் அப்படத்தின் அதிகாரப்பூர்வ ஹிந்தி ரீமேக்கான 'ஷெஸதா' படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான அல்லு அர்ஜுனின் அப்பா அல்லு அரவிந்த், தியேட்டர்களில் அடுத்த வாரம் வெளியாக உள்ள டப்பிங் பட வெளியீட்டை எப்படியாவது நிறுத்த வேண்டும் என்ற முயற்சியில் இறங்கியுள்ளாராம். இந்த டப்பிங் படம் வெளியாகிவிட்டால் ஒரிஜனல் ஹிந்தி ரீமேக் படம் வெளியாகும் போது அதன் வரவேற்பிற்கு சிக்கல் இருக்கும்.
'புஷ்பா' படத்திற்கும் இது போன்ற ஹிந்தி உரிமைப் பிரச்சினையில் சிக்கல் உருவாகி பின்னர் தீர்த்து வைக்கப்பட்டது. அதையும் கோல்ட்மைன்ஸ் டெலிபிலிம்ஸ் நிறுவனம்தான் வெளியிட்டது. 'அலா வைகுந்தபுரம்லோ' ஹிந்தி டப்பிங்கையும் அந்நிறுவனம்தான் வெளியிடுகிறது. 'ஷெஸதா' படத்தின் ஹிந்தி சாட்டிலைட் உரிமையையும் அந்நிறுவனம்தான் பெற்றுள்ளது.
'புஷ்பா' படம் ஹிந்தியில் நல்ல வசூலைக் கொடுத்துள்ளதால் 'அலா வைகுந்தபுரம்லோ' ஹிந்தி டப்பிங் படம் மூலமும் நல்ல வசூலைப் பெறலாம் என திட்டமிட்டிருந்தார்கள். தற்போது பேச்சு வார்த்தை மூலம் தீர்வு ஏற்பட்டுள்ளது. சற்று முன் கோல்ட்மைன்ஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பில் 'அலா வைகுந்தபுரம்லோ' ஹிந்தி டப்பிங்கின் தியேட்டர் வெளியீட்டை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளது.