பெத்தி படத்தின் டப்பிங் பணிகளை துவங்கிய ராம் சரண் | அதிர்ஷ்டசாலி படத்திற்கு அதிர்ஷ்டம் | கடைசி நிமிடங்களில் கத்தாரில் இருந்து தப்பிய சந்தோஷ் நாராயணன் | கிராமத்து கோவிலில் சிறப்பு பூஜை நடத்திய விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா | தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய ரியோ ராஜ் | அஜித் கார் ரேஸ் சினிமாவாகிறது : சிவகார்த்திகேயன், அனிருத் நடிக்கிறார்களா? | நான் கோமாளி அல்ல, ஏமாளி : கூல் சுரேஷ் கண்ணீர் | ஜூலையில் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் ரிலீஸ் : கருப்பு எப்போது... | 'டாடா' போஸ்டர் ஸ்டைலில் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' போஸ்டர் | சினிமாவை விட்டு விலக நினைத்தேன்: நிவேதிதா சதீஷ் |

கொரோனாவின் இரண்டு அலைகள் ஏற்படுத்திய தாக்கத்தில் இருந்து, இந்த மூன்றாவது அலை சற்றே வித்தியாசப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு அலைகளை விட இந்த மூன்றாவது அலையில் திரையுலக பிரபலங்க அதிகம் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். குறிப்பாக இந்தமுறை இளம் நட்சத்திரங்கள் பலரும் கொரோனா தொடரின் பிடியில் சிக்குவது அதிகரித்துள்ளது.
விஷ்ணு விஷால், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி அதிலிருந்து மீண்டு வந்துள்ளனர். அந்தவகையில் நடிகர் துல்கர் சல்மான் தற்போது கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் அவரது தந்தை மம்முட்டியும் கொரோனா தொற்றுக்கு ஆளாகி இருந்த நிலையில் இப்போது துல்கருக்கும் கொரோனா பாதிப்பு என்கிற செய்தி இரண்டு தரப்பு ரசிகர்களையும் மொத்தமாக கவலைப்பட வைத்துள்ளார்..
இதுகுறித்து துல்கர் சல்மான் கூறும்போது, “கோவிட் பாசிடிவ் என இப்போதுதான் ரிசல்ட் வந்துள்ளது.. என்னை தனிமைப்படுத்தி கொண்டுள்ளேன்.. சிறிய ஜுரம் தானே தவிர பெரிய பாதிப்பு ஒன்றுமில்லை. கடந்த சில நாட்களாக என்னுடன் படப்பிடிப்பில் நெருங்கி பணியாற்றியவர்களில் உங்களுக்கு இதுபோன்ற அறிகுறிகள் இருந்தால் தயவுசெய்து தனிமைப்படுத்தி கொள்ளுங்கள். இந்த சர்வதேச பரவல் இன்னும் ஓயவில்லை.. தயவுசெய்து விழிப்புடன் இருங்கள்” என கூறியுள்ளார்...




