நாகார்ஜூனா ரசிகையாக கை தட்டியதில் நானும் ஒருவர்! - அமலா அக்கினேனி | இயக்குனராக கென் கருணாஸ் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ரஜினி, சுந்தர்.சி கூட்டணியில் புதிய படம்? | தீபாவளி பண்டிகையையொட்டி ரசிகர்களுக்கு 'டபுள் ட்ரீட்': இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பிரபாஸ் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு இரட்டை விருந்து | தீபிகா படுகோனேவின் குரல் இனி மெட்டா ஏஐ-யில் ஒலிக்கும் | டாக்ஸிக் படப்பிடிப்பில் பலத்த பாதுகாப்பு | பைசன் டைட்டிலுக்கு மன்னிப்பு கேட்ட மாரி செல்வராஜ் | ஹீரோவானார் 'திருமணம்' சித்து: மனைவியை புகழ்ந்து பேச்சு | பிளாஷ்பேக் : இளையராஜா ஆதிக்கத்தால் தாக்குபிடிக்க முடியாத தேவேந்திரன் |
தமிழில் சிவாஜியின் பேரனும், ராம்குமாரின் மகனுமான துஷ்யந்த் அறிமுகமான மச்சி என்ற படத்தில் நடித்து ஹீரோயினாக அறிமுகமானவர் சுபா பூஞ்சா. அதன்பிறகு திருடிய இதயத்தை, ஒரு பொண்ணு ஒரு பையன், சுட்ட பழம் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். தமிழில் போதிய வாய்ப்பு இல்லாமல் சொந்த ஊருக்கே திரும்பியவர் கன்னட படங்களில் நடித்து வந்தார். கன்னட பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.
இந்த நிலையில் கன்னட தயாரிப்பாளர் சுமந்த் பில்லவா என்பவரை காதலிப்பதாகவும், விரைவில் அவரை திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் ஒரு வருடத்திற்கு முன்பே அறிவித்தார். கொரோனா பிரச்சினை முடிந்த பிறகு பிரமாண்டமாக திருமண விழாவை நடத்த முடிவு செய்திருந்தவர். கொரோனா பிரச்சினை இப்போதைக்கு முடியாது என்பதால் எளிமையாக திருமணத்தை நடத்தி முடித்து விட்டார்.
திருமண படங்களை வெளியிட்டுள்ள சுபா பூஞ்சா இதுகுறித்து கூறியிருப்பதாவது: சுமந்த் பில்லவா உடுப்பியை சேர்ந்தவர். எங்கள் நெருங்கி உறவினர். இருவருமே பெங்களூரில் வசிப்பதால் சொந்த ஊரான உடுப்பியில் திருமணம் செய்து கொள்ள விரும்பினோம். அதன்படி எளிமையாக நடந்தது. 30 பேர் மட்டுமே விழாவில் கலந்து கொண்டார்கள். விரைவில் பெங்களூருவில் வரவேற்பு விழாவை நடத்த முடிவு செய்திருக்கிறோம். என்று கூறியிருக்கிறார்.