மீண்டும் ஹீரோவான ஆனந்த்ராஜ் | போலீஸ் கமிஷனரிடம் அம்பிகா வைத்த கோரிக்கை | போதை பொருள் விவகாரம் : ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு சம்மன் | பிளாஷ்பேக் : சபரிமலையில் படப்பிடிப்பு ; நடிகைகளுக்கு அபராதம் | பிளாஷ்பேக் : சினிமாவான கல்கியின் சமூக கதை | தனி கதாநாயகனாக முதல் வெற்றியைப் பதிவு செய்த துருவ் விக்ரம் | பிரபாஸ் பிறந்தநாளில் 3 அப்டேட்கள் தந்த தயாரிப்பாளர்கள் | பிரதீப் ரங்கநாதனும்... பின்னே மலையாள ஹீரோயின்களின் ராசியும்… | ஹீரோ ஆனார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் | ‛சக்தி திருமகன்' முதல் ‛ஓஜி' வரை : இந்த வார ஓடிடி ஸ்பெஷல்....! |

1980களில் பிரபல பாடலாசிரியராக திகழ்ந்த காமகோடியன்(76) வயது மூப்பு மற்றும் உடல்நலப் பிரச்னையால் சென்னையில் காலமானார். தேவதை, கண்ணாத்தாள், பாட்டாளி, தொடரும், சிகாமணி ரமாமணி, காலாட்படை, வல்லமை தாராயோ உள்பட ஏராளமான படங்களுக்கு நூற்றுக்கணக்கான பாடல்களை எழுதியிருப்பவர் கவிஞர் காமகோடியன்.
எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா, தேவா, எஸ்.ஏ.ராஜ்குமார், பரத்வாஜ், யுவன் சங்கர் ராஜா என 3 தலைமுறை இசையமைப்பாளர்களுடன் இவர் பணியாற்றி உள்ளார். கடைசியாக ‛திருட்டு ரயில்' என்ற படத்தில் மொத்த பாடல்களையும் இவர் எழுதினார். அதன்பின் வயது மூப்பால் சினிமாவை விட்டு ஒதுங்கினார். தமிழக அரசின் கலைமாமணி விருது உள்ளிட்ட விருதுகளை வென்றுள்ளார். இவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்கள், எழுத்தாளர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.




