திருமணத்திற்கு பிறகு கவர்ச்சியாக நடிப்பதில் தவறில்லை : ரகுல் ப்ரீத் சிங் | சுமாரான வரவேற்பில் அனுஷ்காவின் 'காட்டி' | புகழ் படம் வந்ததே தெரியாது, பாலா படம் வந்தது தெரிகிறது…!! | மீசைய முறுக்கு 2 நடிக்க மறுத்தது ஏன்? : தேவா விளக்கம் | குறைந்த காட்சிகளுடன் 4வது வாரத்தில் 'கூலி' | அக்., 2ல் ஓடிடியில் வெளியாகும் ‛தி கேம்' வெப் தொடர் | நிவின்பாலிக்கு தமிழில் ரசிகர்கள் கிடைப்பார்களா? | சம்பளம் வாங்காமல் நடிப்பார் ஜி.வி.பிரகாஷ் | விஷால் திருமணத்துக்கு செல்வாரா மிஷ்கின் | எட்டு நாளில் 120 கோடி வசூலித்த லோகா சாப்டர் 1 சந்திரா |
1980களில் பிரபல பாடலாசிரியராக திகழ்ந்த காமகோடியன்(76) வயது மூப்பு மற்றும் உடல்நலப் பிரச்னையால் சென்னையில் காலமானார். தேவதை, கண்ணாத்தாள், பாட்டாளி, தொடரும், சிகாமணி ரமாமணி, காலாட்படை, வல்லமை தாராயோ உள்பட ஏராளமான படங்களுக்கு நூற்றுக்கணக்கான பாடல்களை எழுதியிருப்பவர் கவிஞர் காமகோடியன்.
எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா, தேவா, எஸ்.ஏ.ராஜ்குமார், பரத்வாஜ், யுவன் சங்கர் ராஜா என 3 தலைமுறை இசையமைப்பாளர்களுடன் இவர் பணியாற்றி உள்ளார். கடைசியாக ‛திருட்டு ரயில்' என்ற படத்தில் மொத்த பாடல்களையும் இவர் எழுதினார். அதன்பின் வயது மூப்பால் சினிமாவை விட்டு ஒதுங்கினார். தமிழக அரசின் கலைமாமணி விருது உள்ளிட்ட விருதுகளை வென்றுள்ளார். இவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்கள், எழுத்தாளர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.