ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தமிழ் சினிமா நடிகையான சனம் ஷெட்டி, இதுவரை 25 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்ற அவர் அதன் மூலம் ஓரளவு சோஷியல் மீடியாக்களில் பேசப்பட்டார். 25 படங்கள் நடித்தும் தனக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று பிக்பாஸ் நிகழ்ச்சியிலேயே புலம்பியிருந்தார்.
பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பிறகும் கூட அவருக்கு பெரிய அளவில் பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இந்நிலையில் இவர் நடித்த படம் ஒன்று தற்போது தான் வெளியாகவுள்ளது. அதற்கான புரோமோஷனல் பணிகளில் சனம் ஷெட்டி சமீபத்தில் கலந்து கொண்டார்.
அப்போது பிக்பாஸ் நிகழ்ச்சியால் உங்களுக்கு அதிக பட வாய்ப்புகள் கிடைக்கிறதா என நிரூபர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த சனம் ஷெட்டி, 'என்னுடைய தனிப்பட்ட அனுபவத்தை மட்டும் தான் சொல்ல முடியும் மற்றவர்களுக்கு எப்படி இருக்கிறது என்பது எனக்கு தெரியாது. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்று வந்ததால் எனக்கு படவாய்ப்புகள் வருகிறதா என்று கேட்டால் இல்லை என்பதுதான் பதில்' என்று கூறியுள்ளார்.