20 வயது நடிகருடன் காதலா... : கீர்த்தி சுரேஷ் பதில் | 'இந்தியன் 3' படத்திற்காக மீண்டும் படப்பிடிப்பு | அஜித்துடன் மோதும் சிவகார்த்திகேயன்? | 'தி கோட்' - தன் வேலையை ஆரம்பித்த மந்திரவாதி | 25 கோடியுடன் முடிவுக்கு வரும் 'சர்பிரா'!!! | விஷாலுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் போட்ட கடிவாளம் | தங்கலான் படத்திற்கு யு/ஏ சான்று | பொறாமைக்கு மருந்தே கிடையாது : இயக்குனர் செல்வராகவன் | ஹீரோ ஆன மகன் விஜய் ஸ்ரீ ஹரி : வனிதா நெகிழ்ச்சி பதிவு | ரீமேக் மாதிரியே இருக்காது : ரசிகரின் கேள்விக்கு ரவி தேஜா பட இயக்குனர் பதில் |
தற்போது ருத்ரன், யானை, பத்து தல , திருச்சிற்றம்பலம், இந்தியன்-2 என் பத்து படங்களில் நடித்து வருகிறார் பிரியா பவானி ஷங்கர். இதில் சர்ஜுன் என்பவரது இயக்கத்தில் பிரியா பவானி சங்கர் கதையின் நாயகியாக நடித்துள்ள படம் பிளாட் மணி. இந்த படம் குவைத் நாட்டில் கொலை வழக்கில் சிக்க வைக்கப்படும் இரண்டு தமிழர்களை ஒரு செய்தி நிறுவனம் எப்படி காப்பாற்றுகிறது என்பதை மையமாகக் கொண்ட கதையில் உருவாகியிருக்கிறது. 90 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த படத்தை ஜீ 5 என்ற இணையதளத்தில் டிசம்பர் 24ஆம் தேதி வெளியிடுகிறார்கள்.
இந்த படத்தின் பிரஸ்மீட்டில் கலந்து கொண்ட பிரியா பவானி சங்கர், இந்தப் படத்தில் ஒரு முக்கியமான பிரச்சினை கையில் எடுக்கப்பட்டுள்ளது. இதை இயக்குனர் கதையாக சொல்லி இருக்கும் விதம் ரசிகர்களை மிகப்பெரிய அளவில் கவரும் என்று கூறினார்.