ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் |

ரேணிகுண்டா படத்தை இயக்கிய ஆர்.பன்னீர் செல்வம் இயக்கும் படம் ஐஸ்வர்யா முருகன். மாஸ்டர் பீஸ் நிறுவனத்தின் சார்பில் ஜி.ஆர். வெங்கடேஷ் மற்றும் கே.வினோத் தயாரிக்கிறார்கள். அருண் பன்னீர்செல்வம். வித்யா பிள்ளை, ஹர்ஷ் லல்வானி ஜி. சாய் சங்கீத், குண்டு கார்த்திக், தீனா, ராஜா, சங்கீதா, ராஜன், தெய்வேந்திரன் , நாகேந்திரன் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். அருண் ஜெனா ஒளிப்பதிவு செய்திருக்கிறார். கணேஷ் ராகவேந்திரா இசை அமைக்கிறார். படத்தின் பணிகள் இறுதிகட்டத்தை நெருங்கி உள்ளது.
படம் பற்றி பன்னீர் செல்வம் கூறியதாவது: தமிழ் சினிமா காதலையும் காதலர்களின் வலியையும், பிரிவையும், இன்பத்தையும் பல படங்களில் சொல்லியிருக்கிறது. ஆனால் ஒரு காதலர்களின் குடும்பங்களின் என்னென்ன துயரங்களை உண்டாக்கும். காதல் சில நேரம் இரு குடும்பத்தையும் இலைகளையும்., கிளைகளையும் தாண்டி வேரோடும்.. ஆணிவேரோடும் அசைத்து நிலை குலைத்து விடுகிறது. காதலின் இந்த பக்கத்தை சொல்லும் படமாக இப்படம் உருவாகியுள்ளது. படத்தின் இறுதிகட்ட பணிகள் நடந்த வருகிறது. என்றார்.




