சூர்யவம்சம் 2ம் பாகம் உருவாகிறது? | தமிழில் அறிமுகமாகும் ராப் பாடகர் வேடன் | உடலை வருத்தும் சிம்பு | தனுஷ் பிறந்தநாளில் புதுப்பொலிவுடன் ரீ-ரிலீஸ் ஆகும் ‛புதுப்பேட்டை' | ஸ்டன்ட் காட்சியில் ஒருவர் உயிரிழப்பு : இயக்குனர் பா.ரஞ்சித் மீது வழக்கு பதிவு | ரஜினி ரசிகர்களுக்கு நேற்று முக்கியமான நாள் : அப்படி என்ன சிறப்பு தெரியுமா? | மகன் மீதான தாக்குதல் : மறைமுகமாக பதிலடி கொடுத்த விஜய்சேதுதி | அடுத்தடுத்து 3 படங்கள்... சம்பளம் 100 கோடி : சிவகார்த்திகேயன் மார்க்கெட் விரிவடைகிறது | ஜுலை 18ல் இத்தனை படங்கள் வெளியீடா….??? | மலேசியாவில் இருந்து சென்னை திரும்பினார் பாரதிராஜா : பாராட்டு விழா எப்போது? |
ஒரு சில படங்களில் நடித்திருந்த யாஷிகா ஆனந்த் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கிழக்கு கடற்கரை சாலை ரிசார்ட் ஒன்றி்ல் நடந்த விருந்தில் கலந்து கொண்டுவிட்டு நண்பர்களுடன் நள்ளிரவில் காரில் திரும்பினார். காரை அவரே ஓட்டி உள்ளார். கார் சாலை தடுப்பு சுவரில் மோதி தூக்கி வீசப்பட்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் யாஷிகாவின் தோழி பவானி மரணம் அடைந்தார். யாஷிகா படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
நான்கு மாதங்களுக்கு பின் மீண்டும் வெளி உலகிற்கு வர தொடங்கி உள்ளார். இந்த நிலையில் விபத்து நடந்த இடத்துக்கு சென்று அதனை யாஷிகா பார்வையிட்டார். அங்கு தன்னை காப்பாற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்களுக்கு கண்ணீ்ர்மல்க நன்றி தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: இந்த இடத்தில்தான் என் தோழியை இழந்தேன். அதனால் இந்த பகுதியை எனக்கு பிடிக்கவில்லை. ஆனால் இந்த பகுதி மக்கள் என்னை காரில் இருந்து வெளியே இழுத்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தது இப்போதும் நினைவிருக்கிறது. என் தோழியையும் அவர்கள் காப்பாற்றி இருந்தால் இன்னும் வேற மாதிரி இருந்திருக்கும். அவர்களுக்கு நன்றி சொல்லவே வந்தேன். இது போன்ற நல்ல மனிதர்கள் உலகில் இருக்கிறார்கள் என்பதை நினைக்கும்போது நெகிழ்ச்சியாக இருக்கிறது. என்றார்.