அடுத்த சிம்பொனி: இளையராஜா அறிவிப்பு | 'மகுடம்' படத்தின் இயக்குனர் ஆனார் விஷால்; அவரே அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் | அட்லி - அல்லு அர்ஜூன் படம் ஒரு சினிமா புரட்சி! ரன்வீர் சிங் வெளியிட்ட தகவல் | 2025ல் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாகும் இறுதி படம் 'தி கேர்ள் ப்ரெண்ட்' | துல்கர் சல்மானின் காந்தா நவம்பர் 14ம் தேதி வெளியாகிறது! | நான் விருது வாங்கினாலும் குப்பை தொட்டியில் தான் போடுவேன்! : விஷால் | முதல் முறையாக முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் சம்யுக்தா! | பிளாஷ்பேக்: தெவிட்டாத திரையிசைப் பாடல்கள் தந்த தித்திக்கும் “தீபாவளி” நினைவுகள் | டேட்டிங் ஆப் மூலம் இரண்டாவது திருமணம் செய்த வசந்த பாலன் பட நாயகி | கதாநாயகன் ஆனார் 'சிறகடிக்க ஆசை' மனோஜ்! |
சரத்குமார், மேக்னா நாயுடு நடித்த வைத்தீஸ்வரன் படத்தை இயக்கிய ஆர்.கே.வித்யாதரன் இயக்கி உள்ள படம் கடைசி காதல் கதை. இதில் வர்மா படத்தில் நடித்த ஆகாஷ் பிரேம்குமார், ஷாலு ஷம்மு, சாம்ஸ் உள்பட பலர் நடித்துள்ளர். படத்தின் டீசர் வெளியீட்டு விழா நேற்று நடந்தது.
இதில் கலந்து கொண்டு இயக்குனர் கே.பாக்யராஜ் பேசியதாவது: தினமும் சாமி கும்பிடும்போது பொதுவான வேண்டுதல் எதையாவது சாமியிடம் கேட்பேன். கொரோனா காலத்தில் பாதிக்கப்பட்ட மக்களை காப்பாற்ற வேண்டினேன். தியேட்டர் திறந்த பிறகு மக்கள் தியேட்டருக்கு வரவேண்டும் என்று வேண்டினேன். இப்போது வரவேண்டாம் என்று வேண்டலாமா என்று யோசிக்கிறேன்.
காரணம் இப்போது சில படங்கள் பார்த்த பின்பு தியேட்டர் திறக்காமலே இருந்திருக்கலாமோ என்று எண்ண தோன்றுகிறது. நல்ல படங்களை வரவேற்கலாம். ஆனால் தவறான உதாரணங்கள் கொண்ட படங்களை வரவேற்கிறோம் என்பது கொஞ்சம் வருத்தம் அளிக்கிறது. அவர்களும் மக்கள் இதைத்தான் ரசிக்கிறார்கள் என்று மக்கள் மீது பழியை போட்டு தவறான படங்களை எடுக்கிறார்கள். பொது நல வழக்கு போடும் அளவிற்கு மன உளைச்சலாக இருக்கிறது. என்றார்.
ஆனால் அது என்ன படங்கள் என்றோ, எந்த மாதிரியான படங்கள் என்றோ அவர் குறிப்பிடவில்லை.