'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படங்களைத் தொடர்ந்து கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் படம் வெந்து தணிந்தது காடு. கயடு லோஹர் நாயகியாக நடித்து வரும் இந்த படத்தை வேல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க, ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.
இந்த படத்தின் இறுதிக்கட்ட படப் பிடிப்பு மும்பையில் நடைபெற்று முடிந்து விட்டதாக செய்திகள் வெளியாகி வந்த நிலையில் தற்போது சிம்பு ஒரு அப்டேட் கொடுத்துள்ளார். அதில் வெந்து தணிந்தது காடு படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு இன்று முதல் தொடங்குவதாக தெரிவித்துள்ளார். அதோடு தனது கையில் துப்பாக்கியுடன் நிற்கும் ஒரு போட்டோவையும் வெளியிட்டுள்ளார். இதையடுத்து இன்னும் சில தினங்களோடு இந்த படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் தொடங்கி விடும் என்றும் அப்படக்குழு வட்டாரங்களில் ஒரு தகவல் செவளியாகியுள்ளது.