கல்வான் பள்ளத்தாக்கு மோதல் கதையில் உருவாகும் படத்தில் சல்மான் கான்! | தக்லைப் படத்தை அடுத்து தெலுங்கு நடிகரை இயக்கும் மணிரத்னம்! | வாடிவாசல் படத்திற்காக 100 சதவீத அர்ப்பணிப்பை கொடுப்பேன்: வெற்றிமாறன் வெளியிட்ட தகவல் | சென்னை விமான நிலையத்தில் சந்தித்துக் கொண்ட விஷால் - விஜய் சேதுபதி! | ராமாயணா படத்தில் யஷ்-க்கு ஜோடியாகும் காஜல் அகர்வால்! | பாகுபலி கதாசிரியரின் அறிவுறுத்தலின்படி கண்ணப்பாவில் மீண்டும் சேர்க்கப்பட்ட மோகன்லால் கதாபாத்திரம் | வாய் பேசா கதாபாத்திரத்தில் சிறை கைதியாக நடித்துள்ள ரவீணா ரவி | அம்மாவின் 2வது திருமணம் ஏற்படுத்திய பாதிப்பு: மனம்திறந்த லிஜோ மோல் ஜோஸ் | பஸ் டிரைவர்களின் பல்லை உடைப்பேன் ; சுரேஷ்கோபி மகன் ஆவேசம் | ஜெயிலர்-2 படப்பிடிப்பில் ரஜினியை சந்தித்து வாழ்த்து பெற்ற மலையாள நடிகர் |
விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படங்களைத் தொடர்ந்து கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் படம் வெந்து தணிந்தது காடு. கயடு லோஹர் நாயகியாக நடித்து வரும் இந்த படத்தை வேல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க, ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.
இந்த படத்தின் இறுதிக்கட்ட படப் பிடிப்பு மும்பையில் நடைபெற்று முடிந்து விட்டதாக செய்திகள் வெளியாகி வந்த நிலையில் தற்போது சிம்பு ஒரு அப்டேட் கொடுத்துள்ளார். அதில் வெந்து தணிந்தது காடு படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு இன்று முதல் தொடங்குவதாக தெரிவித்துள்ளார். அதோடு தனது கையில் துப்பாக்கியுடன் நிற்கும் ஒரு போட்டோவையும் வெளியிட்டுள்ளார். இதையடுத்து இன்னும் சில தினங்களோடு இந்த படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் தொடங்கி விடும் என்றும் அப்படக்குழு வட்டாரங்களில் ஒரு தகவல் செவளியாகியுள்ளது.