ஐதராபாத்தில் விரைவில் ஐமேக்ஸ் தியேட்டர் | சில வருடங்களில் புஷ்பா 3 : நடிகர் ஜெகபதி பாபு தகவல் | டில்லி நீதிமன்றத்தில வழக்கு தொடர்ந்த நாக சைதன்யா | குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே பங்கேற்கும் இறுதிச்சடங்கு : அஜித் குடும்பத்தினர் அறிக்கை | அஜித் தாயார் மறைவு : முதல்வர் விஜய் இரங்கல் | மகன் பட அறிவிப்பும் வந்தாச்சு, அப்பா பட அறிவிப்பு எப்போது வரும் ? | மகளுக்கு திருமணம் : பிரதமருக்கு அழைப்பு விடுத்த குஷ்பு, சுந்தர் சி | ரூ.400 கோடி நஷ்ட ஈடு கேட்டு 'காப்பிரைட்' வழக்கு | சூர்யாவின் முதல் 300 கோடி, அப்படியே தொடர்வாரா...? | நடிகர் அஜித்தின் தாயார் காலமானார் |

கண்ணான கண்ணே சீரியல் ஓரளவுக்கு நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்த மெகா தொடரில் ராகுல் ரவி, நிமேஷிகா ராதா கிருஷ்ணன், பப்லு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். அப்பா மகளுக்கு இடையே நடக்கும் பாச போராட்டத்தையும், அப்பாவின் ஈகோ குணத்தால் ஏற்படும் பிரச்னைகளையும் மையக்கருவாக கொண்டு திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. 250 எபிசோடுகளை தாண்டியுள்ள இந்த தொடர் புதிய திருப்பங்களுடன் விறுவிறுப்புடன் சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் பிரபல சீரியல் நடிகை கீதா ரவிசங்கர் கண்ணான கண்ணே தொடரில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவரது கதாபாத்திரம் சமீபத்திய எபிசோடில் தான் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கீதா ரவிசங்கர் முன்னதாக சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் பல முறை குணச்சித்திர கதாபாத்திரத்தில் தோன்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.