ஐமேக்ஸில் ஜெயிலர் 2 | ஜூன் 1ல் இளையராஜாவின் ‛சிம்பொனி' வெளியீடு | ஜூலையை குறிவைக்கும் ‛டயங்கரம்' | 'பெத்தி' படத்திற்கு யு/ஏ சான்றிதழ் | பரிமளா அண்ட் கோ படத்தின் ரிலீஸ் தேதி மாற்றமா...? | 19 ஆண்டுகளுக்கு பின் ஜீவா, அஞ்சலி கூட்டணி | கர்ணபரம்பரையாக கேட்டு மகிழ்ந்த “கண்ணகி” கதையின் கலையுலக சாதனை | ‛கருப்பு 300' கோடி வசூலிக்குமா?, மூக்குத்தி அம்மன் 3 உருவாகுமா? | கீர்த்தி சுரேஷின் ‛ரப்தார்' ரிலீஸ் தேதி மாற்றம் | 'பெத்தி' படத்திற்கு வந்த புதிய சிக்கல் |

நடிகரும், இயக்குனருமான ஆர்.என்.ஆர்.மனோகர்(61) மாரடைப்பால் சென்னையில் காலமானார்.
இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய ஆர்.என்.ஆர்.மனோகர், ‛‛மைந்தன், கோலங்கள் உள்ளிட்ட படங்களுக்கு கதை, வசனம் எழுதி உள்ளார். அஜித் நடித்த என்னை அறிந்தால் படத்திற்கு இவர் தான் வசனம் எழுதினார். மாசிலாமணி, வேலூர் மாவட்டம் படங்களை இயக்கிய இவர், ‛‛தென்னவன், சபரி, சலீம், வீரம், என்னை அறிந்தால், ஈட்டி, மிருதன், ஆண்டன் கட்டளை, கவண், விஸ்வாசம், காப்பான், டெடி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட படங்களில் வில்லன் மற்றும் குணச்சித்ர வேடங்களில் நடித்துள்ளார்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த மனோகர் கடந்த 20 நாட்களாக சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நோய் தொற்று சரியான நிலையில் மாரடைப்பால் இன்று(நவ., 17) அவரது உயிர் பிரிந்தது. மனோகர் மறைவுக்கு திரையுலகினர் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.




