மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
மலையாள சின்னத்திரை உலகின் முன்னணி நடிகை சந்திரா லட்சுமணன். தமிழில் ஸ்ரீகாந்த் நடித்த மனசெல்லாம், ஏப்ரல் மாதத்தில், ஜெயம்ரவி நடித்த தில்லாலங்கடி, ரஞ்சித் நடித்த அதிகாரம் உள்பட சில படங்களில் நடித்துள்ளார்.
சினிமா வாய்ப்பு குறைந்ததும் சீரியல் பக்கம் சென்றவர் மலையாளத்தில் முன்னணி நடிகை ஆனார். கடந்த 18 ஆண்டுகளாக தொடர்களில் நடித்து வரும் அவர் இதுவரை 50க்கும் மேற்பட்ட தொடர்களில் நடித்துள்ளார். தமிழில் கோலங்கள், காதலிக்க நேரமில்லை, வசந்தம், மகள், துளசி, சொந்த பந்தம், பாசமலர் தொடர்களில் நடித்துள்ளார்.
38 வயதாகும் சந்திரா இதுவரை திருமணம் செய்து கொள்ளவில்லை. தற்போது ஸ்வந்தம் சுஜாதா மலையாள சீரியலில் நடித்து வரும் சந்திராவுக்கும், அவருடன் நடிக்கும் டோஷ் கிறிஸ்டிக்கும் இடையே காதல் ஏற்பட்டது. இந்த காதலை சந்திரா ஏற்கெனவே வெளிப்படையாக அறிவித்து விட்டார்.
நேற்று முன்தினம் இவர்களது திருமணம் கேரளாவில் இருக்கும் தனியார் ரிசார்ட் ஒன்றில் நடைபெற்றது. அந்த திருமண நிகழ்ச்சியில் இரு வீட்டாரும், நெருங்கிய நண்பர்களும் மட்டும் கலந்து கொண்டார்கள். சந்திரா, டோஷுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.