நிஜ சிங்கத்துடன் நடித்த ஷ்ரிதா ராவ் | மோகன்லால், பகத் பாசிலை பின்னுக்குத் தள்ளி கல்யாணி பிரியதர்ஷன் | 2025 : 8 மாதங்களில் 175 படங்கள் ரிலீஸ்... அதிர்ச்சி தரும் ரிசல்ட் | அனுஷ்கா வராதது அவர் விருப்பம் : இயக்குனர் கிரிஷ் பதில் | தெலுங்கு சினிமாவில் 1000 கோடி வசூல் : காரணம் சொல்லும் சிவகார்த்திகேயன் | அஜித், ஆதிக் இணையும் படம் : இந்த மாதம் அறிவிப்பு? | மீண்டும் இணைந்த எஸ்.எம்.எஸ் கூட்டணி : சரி, படத்துல சந்தானம் இருக்கிறாரா? | மலையாளத்தில் கல்யாணிக்கு நடந்தது : திரிஷா, நயன்தாராவுக்கு நடக்கலை | பார்த்திபன் இயக்கும் படத்தில் ‛லப்பர் பந்து' ஹீரோயின் | காஞ்சனா 4 படத்தில் ராஷ்மிகா மந்தனா? |
கன்னட சினிமாவின் முன்னணி நடிகரான புனித் ராஜ்குமார் கடந்த மாதம் 29 ஆம் தேதி உடற்பயிற்சி செய்தபோது திடீர் மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். புனித்தின் திடீர் மரணம் தென்னிந்திய சினிமாவில் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. நல்ல உடல் நலத்துடனும், உடற்கட்டுடனும் இருந்த புனித்தின் மரணம் மருத்துவ உலகையுமே அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
இந்நிலையில் தற்போது புனித் ராஜ்குமாரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வரும் கருத்துகள் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சில சமூக ஊடங்களும் இதுகுறித்து விவாதங்களை நடத்தி வருகிறது.
புனித் ராஜ்குமாருக்கு சிகிச்சை தாமதிக்கப்பட்டதாகவும், உடனடி சிகிச்சை அளித்திருந்தால் அவர் உயிர் பிழைக்க வாய்ப்பிருந்ததாகவும் சர்ச்சை எழுந்துள்ளது. இதனால், புனித்தை முதலில் பரிசோதித்த அவருடைய குடும்ப மருத்துவர் ரமணா ராவுக்கு ரசிகர்களால் ஆபத்து ஏற்படலாம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் மருத்துவரின் வீடு மற்றும் மருத்துவமனைக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.