ஷாருக்கானை தொடர்ந்து சல்மான்கானுக்கு ஜோடியாகும் நயன்தாரா | ஹன்சிகா - சோஹைல் விவாகரத்து: 4 ஆண்டுகளில் முடிவுக்கு வந்த திருமண வாழ்க்கை | லாபத்தில் பங்காக சம்பளம் : ராதிகா பெருமிதம் | விஜயும் யோசித்திருப்பார்.. திரிஷாவுக்கு வாழ்த்துகள்..: பார்த்திபன் 2வது வீடியோ | மேக்கப் போடுவதில் எனக்கு ஆர்வம் கிடையாது : சாரா அர்ஜுன் | நடிகை பாலியல் வழக்கு : கேரளா அரசு மேல்முறையீடுக்கு திலீப் உள்ளிட்ட நால்வருக்கு நோட்டீஸ் | நயன்தாரா, கவின் நடிக்கும் ஹாய் படத்தின் போஸ்டர் வெளியானது | என் அப்பா நினைவுக்கு வந்தார் : தாய் கிழவி வெற்றி விழாவில் கண் கலங்கிய சிவகார்த்திகேயன் | 7ஜி ரெயின்போ காலனி 2 படத்தின் படப்பிடிப்பு மீண்டும் துவங்கியது! | ரிலீஸாகி எட்டு மாதங்களுக்குப் பிறகு ஓடிடியில் வெளியாகும் சித்தாரே ஜமீன் பர் |

விஷால் நடித்த இரும்புத்திரை படம் மூலம் கோலிவுட்டில் இயக்குநராக அறிமுகமானவர் பி.எஸ். மித்ரன். சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ஹீரோ படத்தை இயக்கினார். அடுத்து கார்த்தி நடிப்பில் சர்தார் படத்தை இயக்கி வருகிறார்.
சென்னை நகரம் முழுவதும் மழை வெள்ளம் சூழ்ந்திருக்க, மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கியிருக்கிறது. எங்கள் வீட்டிற்குள் தண்ணீர் புகுந்துவிட்டது என்று மக்கள் சமூக வலைதளங்களில் புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் ஆஸ்கர் விருது பெற்ற கொரிய படமான பாரசைட்டில் வரும் ஒரு காட்சியை மீமாக டுவீட் செய்திருக்கிறார் பி.எஸ். மித்ரன். அதாவது மழை பெய்ததால் காற்று மாசு குறைந்ததாக பணக்காரர்கள் சந்தோஷப்பட, ஏழை மக்களோ வீட்டிற்குள் நீர் புகுந்த கவலையில் இருப்பதை அந்த மீம் காட்டியிருக்கிறது. இந்த மீமுக்கு சமூகவலைதளங்களில் வரவேற்பு கிடைத்து வருகிறது.




