பவன் கல்யாண் படத்தில் நடிக்கும் அர்ஜுன் தாஸ் | வெற்றி பட இயக்குனர் உடன் கைகோர்த்த பஹத் பாசில் | சாதனை மேல் சாதனை படைக்கும் 2018 படம் | மலையாளத்தை புரிந்து நடிப்பது கஷ்டமாக இருக்கிறது ; ஐஸ்வர்யா ராஜேஷ் | மோகன்லால் படத்தால் தாமதமாகும் திலீப் பட வேலைகள் | கணவரின் நடனத்தில் 36,000 குறைகளை கண்டுபிடிக்கும் கத்ரீனா கைப் | ராமன் அல்ல கர்ணன் ; ஆதிபுருஷ் பிரபாஸை விமர்சித்த கஸ்தூரி | டிம்பிள் ஹயாதி மீதான வழக்கை ரத்து செய்ய கோர்ட் மறுப்பு | இளமைகால கவர்ச்சி படத்தை வெளியிட்ட ஜீனத் அமன் | லாந்தர்: விதார்த் நடிக்கும் சஸ்பென்ஸ் த்ரில்லர் |
ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தில் 1970ம் ஆண்டு வாழ்ந்த பிரபல கொள்ளையன் டைகர் நாகேஸ்வரராவின் வாழ்க்கை அதே பெயரில் சினிமாவாகிறது. சென்னை புழல் சிறை உள்பட அவர் அடைத்து வைக்கப்பட்ட அத்தனை சிறைகளில் இருந்தும் அவர் தப்பித்திருக்கிறார். ஒவ்வொரு சிறையில் இருந்தும் அவர் எப்படி தப்பித்தார் என்பதை ஆந்திர போலீஸ் பயிற்சி மையத்தில் பாடமாக வைத்துள்ளனர். இறுதியில் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்த கதைதான் இப்போது படமாகிறது. டைகர் நாகேஸ்வரராவாக ரவி தேஜா நடிக்கிறார். இந்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக ரவி தேஜா தன்னை முழுவதுமாக தயார்படுத்தி வருகிறார். இப்படத்தில் அவரது உடல் மொழி, வசனம் மற்றும் தோற்றம் முன்னெப்போதிலும் இல்லாத வகையில் முற்றிலும் வித்தியாசமாக இருக்கும்.
படத்தை இயக்கவிருக்கும் வம்சி கடந்த 3 ஆண்டுகளாக தனது குழுவினருடன் இணைந்து திரைக்கதை மற்றும் இதர முன்-தயாரிப்பு வேலைகளில் ஈடுபட்டு வருகிறார். இந்த படத்தை அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் பேனரில் அபிஷேக் அகர்வால் தயாரிக்கிறார், தேஜ் நாராயண் அகர்வால் வழங்குகிறார்.
இது ரவி தேஜாவின் முதல் அகில இந்திய படமாகும். தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் இது உருவாகிறது. ஆர் மதி ஒளிப்பதிவை கையாள, ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.