தயாரிப்பாளர் சங்கத்திலும் தலைவர் பதவிக்கு நடிகை போட்டி : பர்தா அணிந்து வந்து மனு தாக்கல் | வார்-2வில் ஹிருத்திக் ரோஷனை விட அதிக சம்பளம் யாருக்குத் தெரியுமா? | மஞ்சு வாரியரா? காவ்யா மாதவனா? : பெண் நடுவரை சிக்கலில் மாட்டிவிட்ட நடிகர் | ஸ்ரீதேவிக்கு ராம் கோபால் வர்மா கொடுத்த ‛டயட் டார்ச்சர்' : சால்பாஸ் இயக்குனர் பகீர் குற்றச்சாட்டு | படம்... பாராட்டு... பயம்... மனம் திறந்த ஸ்ரீகணேஷ் | நானும் மக்கள் பிரதிநிதி தான் - மதுவந்தி | விஷால் கோரிக்கையை நிராகரித்த சினிமா அமைப்புகள் | வெற்றிக்காக காத்திருக்கும் அப்பாவும், மகனும் | ஆட்டுக்கார அலமேலு, கல்யாணராமன், சுல்தான் : ஞாயிறு திரைப்படங்கள் | விக்ரமிற்கு ஜோடியாகும் ருக்மணி வசந்த் |
செய்தி வாசிப்பாளராகவும், சீரியல் நடிகையாகவும் தனது வாழ்க்கையை தொடங்கிய பிரியா பவானி ஷங்கர் தற்போது ரசிகர்கள் விரும்பும் நடிகையாகி இருக்கிறார். சமூக வலைதளங்களில் தீவிரமாக இருக்கும் பிரியா பவானி சங்கர், தனது வித விதமான படங்களை பகிர்ந்துக் கொள்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்.
இந்நிலையில் பிரியா பாவனி சங்கர், 'யாராவது என்னுடன் வாழ்க்கை முழுவதும் இருப்பேன் என்று சொன்னால், என்னுடைய ரியாக்சன் இதுதான்' என்று கும்பிடும் தன்னுடைய புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருக்கிறார். இதனால் ரசிகர்களும் பிரியா பவானி சங்கர் காதல் விவகாரம் குறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.
கடந்த 10 ஆண்டுகளாக ராஜவேல் என்பவரை, நடிகை பிரியா பவானி சங்கர் காதலித்து வருவதாக கூறப்படுகிறது. இருவரும் பிறந்தநாளில் தங்களுக்கு சமூக வலைத்தளத்தில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவிப்பதும், இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்களை பகிரவும் செய்துள்ளனர். இந்நிலையில் இந்த பதிவு இவர்களின் பிரிவை தெரிவிப்பதாக நெட்டிசன்கள் சுட்டிக்காட்டி வருகின்றனர்.