இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
செய்தி வாசிப்பாளராகவும், சீரியல் நடிகையாகவும் தனது வாழ்க்கையை தொடங்கிய பிரியா பவானி ஷங்கர் தற்போது ரசிகர்கள் விரும்பும் நடிகையாகி இருக்கிறார். சமூக வலைதளங்களில் தீவிரமாக இருக்கும் பிரியா பவானி சங்கர், தனது வித விதமான படங்களை பகிர்ந்துக் கொள்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்.
இந்நிலையில் பிரியா பாவனி சங்கர், 'யாராவது என்னுடன் வாழ்க்கை முழுவதும் இருப்பேன் என்று சொன்னால், என்னுடைய ரியாக்சன் இதுதான்' என்று கும்பிடும் தன்னுடைய புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருக்கிறார். இதனால் ரசிகர்களும் பிரியா பவானி சங்கர் காதல் விவகாரம் குறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.
கடந்த 10 ஆண்டுகளாக ராஜவேல் என்பவரை, நடிகை பிரியா பவானி சங்கர் காதலித்து வருவதாக கூறப்படுகிறது. இருவரும் பிறந்தநாளில் தங்களுக்கு சமூக வலைத்தளத்தில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவிப்பதும், இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்களை பகிரவும் செய்துள்ளனர். இந்நிலையில் இந்த பதிவு இவர்களின் பிரிவை தெரிவிப்பதாக நெட்டிசன்கள் சுட்டிக்காட்டி வருகின்றனர்.