வெகுளித்தனமாக பதில் சொல்லி குஞ்சாக்கோ போபனுக்கு சங்கடத்தை கொண்டு வந்த டூப் ஆர்ட்டிஸ்ட் | விடாப்பிடியாக நின்று மோகன்லாலை சந்தித்த 80 வயது ரசிகை | பிளாஷ்பேக்: மொழி மாற்றம் செய்து வியாபாரப் போட்டியில் வென்று காட்டிய ஏ வி எம்மின் 'அரிச்சந்திரா' | ரஜினி பட இயக்குனர் யார் ? பரவும் தகவல்கள் | அன்பே வா, அவள் வருவாளா, நம்ம வீட்டுப் பிள்ளை - ஞாயிறு திரைப்படங்கள் | சம்பளத்திற்காக மிரட்டும் நடிகை | நான் கொடூரக்கோலத்தில் இருந்தாலும் என் கணவர் ரசிப்பார்..! கீர்த்தி சுரேஷ் ‛ஓபன்டாக்' | நிஜ போலீஸ் டூ 'பேட்பெல்லோ' வில்லன்: கராத்தே கார்த்தியின் கதை | ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? |

செய்தி வாசிப்பாளராகவும், சீரியல் நடிகையாகவும் தனது வாழ்க்கையை தொடங்கிய பிரியா பவானி ஷங்கர் தற்போது ரசிகர்கள் விரும்பும் நடிகையாகி இருக்கிறார். சமூக வலைதளங்களில் தீவிரமாக இருக்கும் பிரியா பவானி சங்கர், தனது வித விதமான படங்களை பகிர்ந்துக் கொள்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்.
இந்நிலையில் பிரியா பாவனி சங்கர், 'யாராவது என்னுடன் வாழ்க்கை முழுவதும் இருப்பேன் என்று சொன்னால், என்னுடைய ரியாக்சன் இதுதான்' என்று கும்பிடும் தன்னுடைய புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருக்கிறார். இதனால் ரசிகர்களும் பிரியா பவானி சங்கர் காதல் விவகாரம் குறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.
கடந்த 10 ஆண்டுகளாக ராஜவேல் என்பவரை, நடிகை பிரியா பவானி சங்கர் காதலித்து வருவதாக கூறப்படுகிறது. இருவரும் பிறந்தநாளில் தங்களுக்கு சமூக வலைத்தளத்தில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவிப்பதும், இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்களை பகிரவும் செய்துள்ளனர். இந்நிலையில் இந்த பதிவு இவர்களின் பிரிவை தெரிவிப்பதாக நெட்டிசன்கள் சுட்டிக்காட்டி வருகின்றனர்.




