பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' ரிலீஸ் மீண்டும் தள்ளிப்போகிறதா? | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பேரரசு! | சூர்யா 47வது படத்தின் புதிய அப்டேட்! | ஆஸ்கர் வென்ற பாடல் பிரபலத்துடன் இணையும் பிரபாஸ்! | ‛வாரணாசி' படத்தால் நாடே பெருமைப்படும்: மகேஷ் பாபு பேச்சு | ஆறு வருடமாக பாலியல் டார்ச்சர் செய்த துணை நடிகை மீது போலீஸில் நடிகர் புகார் | பிடிவாதமாக பெட்ரோலை குடித்த அஜித்; திருப்பதியில் அஜித் எடுத்த ரிஸ்க் | பிளாஷ்பேக்: முதல் ஒளி வடிவம் பெற்ற ஜெயகாந்தனின் “உன்னைப் போல் ஒருவன்” | ஹிந்தி பட புரமோஷனில் காதலுக்கு விளக்கம் கொடுத்த தனுஷ் | ‛நூறு சாமி'க்காக காத்திருக்கும் ‛லாயர்' |

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் வரலட்சுமி. நடிகர் சரத்குமாரின் மகளான வரலட்சுமியின் அம்மா சாயா தேவி. பல வருடங்களுக்கு முன்பு இவரை விவகாரத்து செய்துவிட்டார் சரத்குமார். அதற்குப் பிறகு நடிகை ராதிகாவை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.
தனது அம்மாவை விட்டு அப்பா பிரிந்தாலும் சரத்குமார், ராதிகா குடும்பத்தினருடன் வரலட்சுமி நெருக்கமாகவே இருக்கிறார். நேற்று தனது அம்மா சாயாதேவியின் 60வது பிறந்த தினத்தை நெருங்கிய நண்பர்களுடனும், உறவினர்களுடனும் கொண்டாடி இருக்கிறார் வரலட்சுமி. தனது தங்கை பூஜாவுடன் சேர்ந்து இந்த ஏற்பாடுகளை செய்திருக்கிறார் வரலட்சுமி.
இது குறித்த புகைப்படங்களைப் பகிர்ந்து தனது அம்மாவைப் பற்றிய எமோஷனலான பதிவு ஒன்றையும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். “60 வருடங்களாக தியாகங்கள், அன்பு, மறக்க முடியாத பயணம், உங்களை நேசிக்கும் குடும்பம், இன்னும் பல இருக்கிறது, லவ் யூ மம்மி, நான் உணர்வதை விவரிக்க வார்த்தைகள் இல்லை. ஆனால், நான் எப்போதும் சொல்வேன், நான் யார் என்பதை உருவாக்கியது நீங்கள்தான்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.