அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு |
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் வரலட்சுமி. நடிகர் சரத்குமாரின் மகளான வரலட்சுமியின் அம்மா சாயா தேவி. பல வருடங்களுக்கு முன்பு இவரை விவகாரத்து செய்துவிட்டார் சரத்குமார். அதற்குப் பிறகு நடிகை ராதிகாவை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.
தனது அம்மாவை விட்டு அப்பா பிரிந்தாலும் சரத்குமார், ராதிகா குடும்பத்தினருடன் வரலட்சுமி நெருக்கமாகவே இருக்கிறார். நேற்று தனது அம்மா சாயாதேவியின் 60வது பிறந்த தினத்தை நெருங்கிய நண்பர்களுடனும், உறவினர்களுடனும் கொண்டாடி இருக்கிறார் வரலட்சுமி. தனது தங்கை பூஜாவுடன் சேர்ந்து இந்த ஏற்பாடுகளை செய்திருக்கிறார் வரலட்சுமி.
இது குறித்த புகைப்படங்களைப் பகிர்ந்து தனது அம்மாவைப் பற்றிய எமோஷனலான பதிவு ஒன்றையும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். “60 வருடங்களாக தியாகங்கள், அன்பு, மறக்க முடியாத பயணம், உங்களை நேசிக்கும் குடும்பம், இன்னும் பல இருக்கிறது, லவ் யூ மம்மி, நான் உணர்வதை விவரிக்க வார்த்தைகள் இல்லை. ஆனால், நான் எப்போதும் சொல்வேன், நான் யார் என்பதை உருவாக்கியது நீங்கள்தான்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.