மன்னிப்பு டுவீட்... சின்மயி விளக்கம் அளிக்க வேண்டும் : மோகன்ஜி | நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி ஆதாரங்களை சமர்ப்பித்த நிவின்பாலி | இந்த ஆண்டு 3வது யானை படம் | குறும்புக்கார குழந்தை : விநாயகனை நெகிழ வைத்த மம்முட்டி | ரிலீசுக்கு முன்பே 350 கோடி முன் வியாபாரத்தை முடித்த 'திரிஷ்யம் 3' | பாலிவுட் படப்பிடிப்பில் உட்காருவதற்கு நாற்காலி கூட கிடைக்காது; துல்கர் சல்மான் பகீர் தகவல் | 'திரிஷ்யம் 3' படப்பிடிப்பை நிறைவு செய்த மோகன்லால் | ரியோ என பெயரை மாற்றிய நடிகர் ரியோ ராஜ்! | 5 ஆண்டுகளாக கதை குறித்த ஆலோசனையில் ஈடுபட்டு வரும் கீர்த்தி சுரேஷ்! | மலேசியா முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்த அஜித்குமார்! |

தீபாவளி தினத்தன்று 'அண்ணாத்த, மாநாடு, எனிமி' ஆகிய படங்கள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. நேற்று அந்தப் போட்டியிலிருந்து 'மாநாடு' படம் விலகியது. அதிகமான தியேட்டர்களில் வெளியிட விரும்பி 'மாநாடு' பட வெளியீட்டை நவம்பர் 25ம் தேதிக்கு தயாரிப்பாளர் தள்ளி வைத்துவிட்டார். அதனால், தற்போது 'அண்ணாத்த, எனிமி' ஆகிய படங்கள் மட்டுமே தீபாவளிக்கு வர உள்ளன.
ஒரே சமயத்தில் 'அண்ணாத்த' படத்துடன் மேலும் இரண்டு படங்களுக்குத் தியேட்டர்களை ஒதுக்குவதில் சிரமம் என தியேட்டர்காரர்கள் தரப்பில் சொல்லப்பட்டதாம். 'மாநாடு' படத்தை 500 தியேட்டர்களிலாவது வெளியிட வேண்டும் என அதன் தயாரிப்பாளர் விரும்பினாராம்.
'அண்ணாத்த' படத்திற்கு மட்டுமே 600 தியேட்டர்கள் போய்விடும் நிலையில் தற்போது 'எனிமி' படத்திற்கு 300 தியேட்டர்கள் கிடைக்கும் எனத் தெரிகிறது. 'மாநாடு' போட்டியிலிருந்து விலகியதால் அது 'எனிமி' படத்திற்கு லாபமாக அமைந்துள்ளது. மேலும், 'எனிமி' படத்திற்கான வியாபாரமும் முடிவடைந்துவிட்டது.
'அண்ணாத்த, எனிமி' இரண்டு படங்களுமே தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகிறது.




