வெப் தொடரில் விஜய்சேதுபதி மகன் | நானும் ஐஸ்வர்யா ராஜேஷ் அப்பாவும் நண்பர்கள் : நடிகர் அர்ஜூன் | லாட்டரி சீட்டு பின்னணியில் 80களின் நடக்கும் கதை ‛ராபின்ஹுட்' | படம் இருக்குது, ஆனா இயக்குனர் இல்லை : இது கமல் தரப்பு விளக்கம் | பாலிவுட்டின் மூத்த நடிகை காமினி கவுசல் காலமானார் | குடும்பங்கள் கொண்டாடிய படங்களின் இயக்குனர் வி சேகர் காலமானார் | கும்கி 2 படத்தை வெளியிட அனுமதி | பல ஹீரோக்கள் இதை விரும்பமாட்டார்கள் - ஆண்ட்ரியா | ராஷ்மிகாவுக்கு தேசிய விருது நிச்சயம் : தேவிஸ்ரீ பிரசாத் நம்பிக்கை | பெங்களூர் டேஸ் படத்தை ரீமேக் செய்து கெடுத்து விட்டோம் : ராணா |

தீபாவளி தினமான நவம்பர் 4ம் தேதியன்று ரஜினிகாந்த் நடித்துள்ள 'அண்ணாத்த', சிம்பு நடித்துள்ள 'மாநாடு', விஷால், ஆர்யா நடித்துள்ள 'எனிமி', அருண் விஜய் நடித்துள்ள வா டீல் ஆகிய படங்கள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நான்குமுனைப் போட்டியிலிருந்து தற்போது 'மாநாடு' படம் விலகும் எனத் தெரிகிறது. 'அண்ணாத்த' படத்தை மட்டும் தமிழ்நாட்டில் மட்டும் 600க்கும் அதிகமான தியேட்டர்களில் வெளியிட பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம். இதனால், 'மாநாடு, எனிமி' ஆகிய படங்களுக்கு அதிகபட்சமாக தலா 200 தியேட்டர்கள் கிடைத்தாலே அதிகம் என்கிறார்கள்.
எனவே, 'அண்ணாத்த' படத்துடன் போட்டி போடாமல் வேறொரு நாளில் படத்தை வெளியிடலாம் என 'மாநாடு' தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி முடிவு செய்துள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 'மாநாடு' படத்தை 500க்கும் அதிகமான தியேட்டர்களில் வெளியிட்டால் தான் எதிர்பார்த்த வசூல் சில நாட்களில் கிடைக்க வாய்ப்புள்ளது. அதனால் தான் அவர் இந்த முடிவை எடுக்க இருப்பதாகத் தெரிவிக்கிறார்கள்.
'எனிமி' படமும் போட்டியில் இருக்குமா அல்லது கிடைத்த தியேட்டர்களே போதும் என படத்தை வெளியிடுவார்களா என்பதும் விரைவில் தெரிந்துவிடும்.




