சூர்யவம்சம் 2ம் பாகம் உருவாகிறது? | தமிழில் அறிமுகமாகும் ராப் பாடகர் வேடன் | உடலை வருத்தும் சிம்பு | தனுஷ் பிறந்தநாளில் புதுப்பொலிவுடன் ரீ-ரிலீஸ் ஆகும் ‛புதுப்பேட்டை' | ஸ்டன்ட் காட்சியில் ஒருவர் உயிரிழப்பு : இயக்குனர் பா.ரஞ்சித் மீது வழக்கு பதிவு | ரஜினி ரசிகர்களுக்கு நேற்று முக்கியமான நாள் : அப்படி என்ன சிறப்பு தெரியுமா? | மகன் மீதான தாக்குதல் : மறைமுகமாக பதிலடி கொடுத்த விஜய்சேதுதி | அடுத்தடுத்து 3 படங்கள்... சம்பளம் 100 கோடி : சிவகார்த்திகேயன் மார்க்கெட் விரிவடைகிறது | ஜுலை 18ல் இத்தனை படங்கள் வெளியீடா….??? | மலேசியாவில் இருந்து சென்னை திரும்பினார் பாரதிராஜா : பாராட்டு விழா எப்போது? |
தீபாவளி தினமான நவம்பர் 4ம் தேதியன்று ரஜினிகாந்த் நடித்துள்ள 'அண்ணாத்த', சிம்பு நடித்துள்ள 'மாநாடு', விஷால், ஆர்யா நடித்துள்ள 'எனிமி', அருண் விஜய் நடித்துள்ள வா டீல் ஆகிய படங்கள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நான்குமுனைப் போட்டியிலிருந்து தற்போது 'மாநாடு' படம் விலகும் எனத் தெரிகிறது. 'அண்ணாத்த' படத்தை மட்டும் தமிழ்நாட்டில் மட்டும் 600க்கும் அதிகமான தியேட்டர்களில் வெளியிட பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம். இதனால், 'மாநாடு, எனிமி' ஆகிய படங்களுக்கு அதிகபட்சமாக தலா 200 தியேட்டர்கள் கிடைத்தாலே அதிகம் என்கிறார்கள்.
எனவே, 'அண்ணாத்த' படத்துடன் போட்டி போடாமல் வேறொரு நாளில் படத்தை வெளியிடலாம் என 'மாநாடு' தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி முடிவு செய்துள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 'மாநாடு' படத்தை 500க்கும் அதிகமான தியேட்டர்களில் வெளியிட்டால் தான் எதிர்பார்த்த வசூல் சில நாட்களில் கிடைக்க வாய்ப்புள்ளது. அதனால் தான் அவர் இந்த முடிவை எடுக்க இருப்பதாகத் தெரிவிக்கிறார்கள்.
'எனிமி' படமும் போட்டியில் இருக்குமா அல்லது கிடைத்த தியேட்டர்களே போதும் என படத்தை வெளியிடுவார்களா என்பதும் விரைவில் தெரிந்துவிடும்.