குட் பேட் அக்லி படத்தின் டிரைலர் அப்டேட் | ஸ்ருதி நாராயணனின் இன்ஸ்டா பதிவு | சிக்கந்தர் - மோசமில்லாத முதல் நாள் வசூல் | மாஸ்க், தொப்பி அணிந்தபடி டேட்டிங் செல்லும் விஜய்தேவர கொண்டா - ராஷ்மிகா | ரிலீஸிற்கு முன்பே பார்த்திருந்தால் மோகன்லால் அனுமதித்திருக்க மாட்டார் : மேஜர் ரவி கருத்து | தல வருகிறார், அவரை பாருங்கள் : அருண் விஜய் வெளியிட்ட பதிவு | ஏற்றி விட்ட ஏணியை மறந்து போன நடிகர்கள் : பாவமில்லையா பாரதிராஜா...! | மேலிடத்து உத்தரவு... கால்ஷீட் தராத தனுஷ் : தயாரிப்பாளர் குற்றச்சாட்டு | கண்ணப்பா ரிலீஸ் தள்ளிப்போனது : காரணம் இது தான் | விஷாலுக்கு ஜோடியாகும் துஷாரா விஜயன் |
மகதீரா, பாகுபலி, பாகுபலி 2, மெர்சல், மணிகர்னிகா, தலைவி, ஆர்ஆர்ஆர் என பல படங்களுக்கு கதை எழுதியவர் ராஜமவுலியின் தந்தையான விஜயேந்திர பிரசாத். தற்போது பாலிவுட்டில் தயாராகும் சீதா என்ற படத்திற்கு கதை எழுதியுள்ளார்.
இந்நிலையில் அடுத்தபடியாக மகேஷ்பாபு நடிக்கும் புதிய படத்திற்காகவும் ஒரு கதையை எழுதி கொடுத்துள்ள விஜயேந்திர பிரசாத், அடுத்தபடியாக பவன்கல்யாணுக்காக ஒரு பவர்புல்லான கதையை எழுதி வருகிறாராம். இந்த கதையை பவன்கல்யாணிடம் அவர் சொன்னபோது தனக்கு மிகவும் பிடித்திருப்பதாக சொன்னதை அடுத்து அந்த ஸ்கிரிப்ட் வேலைகளில் இறங்கியிருக்கிறார் விஜயேந்திர பிரசாத்.
தற்போது அய்யப்பனும் கோஷியும் தெலுங்கு ரீமேக் மற்றும் ஹரிஹர வீரமல்லு ஆகிய படங்களில் நடித்து வரும் பவன் கல்யாண் அப்படங்களை முடித்ததும் விஜயேந்திர பிரசாத் எழுதி வரும் கதையில் நடிக்கப்போகிறார்.