தக் லைப்பில் அதிரடி நடனத்திற்கு தயாராகும் த்ரிஷா | குணா பாடலுக்கு முறைப்படி அனுமதி பெற்றுள்ளோம் : மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர் விளக்கம் | நான் சிங்கிள், மிங்கிளாக விரும்பவில்லை : ஸ்ருதிஹாசன் | பாராசூட்டில் பறந்த கோட் பட நாயகி மீனாட்சி சவுத்ரி! | அபுதாபியில் பிரதமர் மோடி திறந்து வைத்த கோயிலுக்கு சென்ற ரஜினி | 100ஐத் தொட்டது 2024 தமிழ்ப் படங்கள் ரிலீஸ் | சூர்யா 44 படப்பிடிப்பு ஜுன் முதல் ஆரம்பம் | மீண்டும் பெண் குழந்தையை பெற்றெடுத்த ஸ்ரீதேவி | கழுத்தில் தாலியுடன் ஆர்த்தி சுபாஷ் : ரசிகர்களுக்கு மீண்டும் ஏமாற்றம் | அரசியல் பிரபலத்துடன் திருமணமா? - ரேகா நாயர் ஓபன் டாக் |
நீண்ட இடைவெளிக்கு பின்னர் டோலிவுட்டின் மெகா ஸ்டார் நடிகர் சிரஞ்சீவி வெள்ளித்திரையில் தோன்றவுள்ளார். அவரது மகனும் தெலுங்கு திரை உலகின் முன்ணனி நடிகராக வளர்ந்து வரும் நடிகருமான ராம் சரண் நடிக்கும் ப்ரூஸ் லீ படத்தில் சிறப்பு தோற்றத்தில் சிரஞ்சீவி நடிக்கவுள்ளார். இயக்குனர் ஸ்ரீனு வைட்டாலா இயக்கும் இப்படத்தில் சிரஞ்சீவி சிறப்பு தோற்றத்தில் நடிப்பதுடன் பாடல் காட்சியிலும் நடனமாடி அசத்தவுள்ளார். இதற்கான படப்பிடிப்பில் சிரஞ்சீவி இன்று(செப்டம்பர் 28)முதல் கலந்து கொள்ளவுள்ளார்.
ஐதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் நடைபெறும் படப்பிடிப்பில் சிரஞ்சீவி பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 16 ஆம் தேதி விஜயதசமி அன்று ப்ரூஸ் லீ திரைப்படம் திரைக்கு வரவுள்ளது. அதுவரை காத்திருக்க விரும்பாத மெகா ஸ்டார் ரசிகர்கள் தற்போதே கொண்டாட்டங்களை துவங்கிவிட்டனர். நீண்ட இடைவெளிக்கு பின்னர் சிரஞ்சீவி படப்பிடிப்பில் பங்கெடுப்பதை தொடர்ந்து மெகா ஸ்டார் ரசிகர்கள் சிரஞ்சீவியை வரவேற்கும் வண்ணம் டுவிட்டரில் வெல்கம்பேக்சிரஞ்சீவி என்ற ஹஷ்டெக்கை ட்ரெண்டாக்கி வருகின்றனர். கடந்த 2009ல் ராம் சரண் நடிப்பில் வெளிவந்த மகதீரா இடம் பெற்ற பாடல் காட்சியில், சிறப்பு தோற்றத்தில் சிரஞ்சீவி இறுதியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.