ரஜினி படத்துடன் மோதுகிறது சூர்யா 47 படம் | சர்வம் டெலுலு எப்படி சர்வம் மாயா ஆனது : இயக்குனர் பகிர்ந்த சுவாரஸ்யம் | இரவில் ரஜினி உடன் பைக் ரைட் : ராதிகா சொன்ன பிளாஷ்பேக்... | 100 ஆண்டுக்கு அப்புறம் தான் ரிலீஸ்; ஆனா இப்பவே படம் 'ரெடி': ஹாலிவுட்டில் புது கூத்து! | ‛ஜெயிலர் 2' சஸ்பென்ஸை உடைத்த சிவராஜ் குமார் | சாதனை விலைக்கு விற்கப்பட்டதா 'டாக்சிக்' வெளிநாட்டு உரிமை ? | மீனவர் பிரச்னையை தனித்துவமாக பேசும் 'வலை': இரட்டை வேடங்களில் நடிக்கிறார் அதர்வா | வையாபுரிக்கு ஜோடியான ‛பிக்பாஸ்' தாமரை | இளையராஜா இசையமைக்கும் ‛சைலப்பன் சைக்களிள் மார்ட்' | சபரிமலை தங்கம் திருட்டு வழக்கில் 17ம் தேதி ஆஜராக நடிகர் ஜெயராமுக்கு அமலாக்கத்துறை சம்மன் |

நடிகர் ராம்சரண் ஆர்ஆர்ஆர் படத்தை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் புச்சி பாபு சனா இயக்கத்தில் தற்போது பெத்தி என்கிற படத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பு மட்டுமல்லாது குடும்ப சுற்றுப்பயணமாகவும் அடிக்கடி வெளிநாடுகள் சென்று வருவதை ராம்சரண் வாடிக்கையாகவே வைத்திருந்தார். இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவரது மனைவி உபாசனா அடிக்கடி சோசியல் மீடியாவில் பகிர்ந்து கொள்வதை வாடிக்கையாக வைத்துள்ளார்.
சமீபத்திய பேட்டி ஒன்றில் உபாசனா கூறும்போது, “எந்த வெளிநாட்டிற்கு சென்றாலும் மறக்காமல் குக்கர் ஒன்றை கையோடு கூடவே எடுத்து வந்து விட வேண்டும் என்பது ராம்சரணின் உத்தரவு. காரணம் வெளிநாட்டுக்கு சென்றாலும் தினசரி சாப்பாட்டில் அவருக்கு ஒரு இந்திய உணவாவது கட்டாயம் இருக்க வேண்டும். அதனாலேயே பெரும்பாலும் ராம்சரணின் தாயார் சில இந்திய உணவு வகைகளை ரெடிமேடாக எங்களுக்கு தயாரித்து கொடுத்து அனுப்பி விடுவார். நாங்கள் வெளிநாட்டில் ஹோட்டல்களில் இருந்து உணவை வரவழைத்து சாப்பிட்டாலும் கூட தங்கி இருக்கும் இடத்தில் அவருக்கு பிடித்த ஒரு நம்ம ஊரு ஸ்பெஷல் ஒன்றையும் சமைத்து விடுவோம். அதற்காகவே வீட்டிலிருந்து கையோடு குக்கர் ஒன்றையும் எடுத்துச் சென்று விடுகிறோம்” என கூறியுள்ளார்.




