நடிகைகளை இதற்கு மட்டுமே பயன்படுத்துகிறார்கள் : ராதிகா ஆப்தே ஆதங்கம் | சென்சாரில் சிக்கிய பல்டி பட ஹீரோவின் படம் : உயர்நீதிமன்ற நீதிபதிக்காக தனிக்காட்சி திரையீடு | நிபந்தனையுடன் துல்கர் சல்மானின் லேண்ட்ரோவர் கார் திரும்ப ஒப்படைப்பு | கூகுள் கிளவுட் உடன் இணைந்த ஏஆர் ரஹ்மான் | எனக்கு பிடித்தமான ஹீரோ நானி : ருக்குமணி வசந்த் | சூர்யா 47- வது படத்தில் இணையும் பஹத் பாசில் | நீதிமன்றம் கெடுபிடி : வெளிநாட்டு பயணத்தை ரத்து செய்த ஷில்பா ஷெட்டி | அப்பா வேடத்தில் கலக்கிய சரத்குமார், பசுபதி | பவன் கல்யாண் படத்தை இயக்கும் போட்டியில் லோகேஷ், வினோத் | மீண்டும் இணையும் நாகர்ஜூனா, அனுஷ்கா ஜோடி |
நடிகர் ராம்சரண் ஆர்ஆர்ஆர் படத்தை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் புச்சி பாபு சனா இயக்கத்தில் தற்போது பெத்தி என்கிற படத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பு மட்டுமல்லாது குடும்ப சுற்றுப்பயணமாகவும் அடிக்கடி வெளிநாடுகள் சென்று வருவதை ராம்சரண் வாடிக்கையாகவே வைத்திருந்தார். இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவரது மனைவி உபாசனா அடிக்கடி சோசியல் மீடியாவில் பகிர்ந்து கொள்வதை வாடிக்கையாக வைத்துள்ளார்.
சமீபத்திய பேட்டி ஒன்றில் உபாசனா கூறும்போது, “எந்த வெளிநாட்டிற்கு சென்றாலும் மறக்காமல் குக்கர் ஒன்றை கையோடு கூடவே எடுத்து வந்து விட வேண்டும் என்பது ராம்சரணின் உத்தரவு. காரணம் வெளிநாட்டுக்கு சென்றாலும் தினசரி சாப்பாட்டில் அவருக்கு ஒரு இந்திய உணவாவது கட்டாயம் இருக்க வேண்டும். அதனாலேயே பெரும்பாலும் ராம்சரணின் தாயார் சில இந்திய உணவு வகைகளை ரெடிமேடாக எங்களுக்கு தயாரித்து கொடுத்து அனுப்பி விடுவார். நாங்கள் வெளிநாட்டில் ஹோட்டல்களில் இருந்து உணவை வரவழைத்து சாப்பிட்டாலும் கூட தங்கி இருக்கும் இடத்தில் அவருக்கு பிடித்த ஒரு நம்ம ஊரு ஸ்பெஷல் ஒன்றையும் சமைத்து விடுவோம். அதற்காகவே வீட்டிலிருந்து கையோடு குக்கர் ஒன்றையும் எடுத்துச் சென்று விடுகிறோம்” என கூறியுள்ளார்.