மூணு குழந்தைகள் பெத்துக்கணும்... ஜான்வி கூறும் காரணம் | இரண்டாவது வாய்ப்பில் வெற்றி பெறுவாரா ருக்மிணி வசந்த்? | ‛கட்டா குஸ்தி 2' படம் துவங்கியது | சுதீப்பின் அடுத்த படத் தலைப்பு 'மார்க்' | தெலுங்கில் 100 கோடி வியாபாரத்தில் 'காந்தாரா சாப்டர் 1' | ரசிகர்களின் எதிர்பார்ப்புக்காக மட்டுமே படம் எடுக்க மாட்டேன் : லோகேஷ் கனகராஜ் | நல்ல கதாபாத்திரம் கிடைப்பதுதான் ஒரு நடிகைக்கு அங்கீகாரம்: மிர்னா மேனன் | பிளாஷ்பேக்: ரஜினி படத்தை தயாரித்து, இயக்கிய கன்னட நடிகர் | பிளாஷ்பேக்: ஹாலிவுட் ரீமேக்கில் நடிக்க மறுத்த பானுமதி | நடப்பு தயாரிப்பாளர் சங்க தேர்தல் : அனைத்து நிர்வாகிகளும் போட்டியின்றி தேர்வு |
மலையாள சினிமாவில் குணச்சித்திரம் மற்றும் காமெடி நடிகர் ரெஜி. 52 வயதான இவர் பல படங்களில் சிறிய கேரக்டர்களிலும், சில படங்களில் பெரிய கேரக்டர்களிலும் நடித்துள்ளார். கடந்த ஆண்டு கேரள மாநிலம் கோட்டயம் அருகே சினிமாவில் நடிக்க வந்த சிறுமியை பலாத்காரம் செய்ததாக சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர்.
இதைத் தொடர்ந்து ரெஜி மீது போலீசார் போக்சோ பிரிவில் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இந்த வழக்கு ஈராற்றுபேட்டை அதிவிரைவு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், நடிகர் ரெஜிக்கு 136 ஆண்டுகள் கடுங்காவல் சிறையும், 1 லட்சத்து 97 ஆயிரத்து 500 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது . அபராதத் தொகையில் ரூ.1 லட்சத்து 75 ஆயிரத்தை பாதிக்கப்பட்ட சிறுமிக்கு கொடுக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவித்தாலும் அவர் சாகும் வரை சிறையியிலையே இருக்க வேண்டியது வரும் என்று சட்ட நிபுணர்கள் கூறுகிறார்கள்.