சசிகுமார், சிம்ரன் இணைந்து நடிக்கும் புதிய படம் துவக்கம் | விஜய் 69 : புரட்சிகரமான அரசியல் படமாம் | மாதம்பட்டி ரங்கராஜூக்கு ஜோடியாக ஆத்மிகா | ‛கேப்டன்' பாடல், போஸ்டருக்கெல்லாம் காப்புரிமை கேட்க மாட்டோம் : பிரேமலதா | திருப்பதி ‛லட்டு' பற்றிய கேள்வி : ‛நோ கமென்ட்ஸ்' என்ற ரஜினி | ஜூனியர் என்டிஆர் ரசிகர்களை எச்சரித்த வேதிகா | 'மெய்யழகன்' நீளம் குறைக்கப்படுமா? - பிடிவாதம் பிடிக்கும் பிரேம்குமார் | என்கவுன்டர் அதிகாரியின் இன்னொரு பக்கம் : வேட்டையன் குறித்து பேசிய ஞானவேல் | இயக்குனர் சுகுமாருக்கு எல்லா விஷயமும் தெரியும் : ஜானி மாஸ்டர் வாக்குமூலம் | ஒரு வார இடைவெளியில் வெளியாகும் பஹத் பாசிலின் 2 படங்கள் |
மலையாளத்தில் ஒரு அடார் லவ் என்கிற படத்தின் மூலம் பிரபலமானவர் இயக்குனர் ஒமர் லுலு. புருவ அழகி என புகழ் பெற்ற பிரியா பிரகாஷ் வாரியரை இந்த படத்தின் மூலம் அறிமுகப்படுத்தியது இவர்தான். மேலும் ஹேப்பி வெட்டிங், நல்ல சமயம், டமாக்கா உள்ளிட்ட பல படங்களை இவர் இயக்கியுள்ளார். இந்த நிலையில் அவரது படங்களில் தொடர்ந்து சில கதாபாத்திரங்களில் நடித்து வந்த நடிகை ஒருவர் தன்னை கதாநாயகியாக ஆக்குவதாக வாக்குறுதி கொடுத்து இயக்குநர் ஒமர் லுலு தன்னை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்தார் என போலீசில் புகார் அளித்தார்.
இதையடுத்து இயக்குனர் ஒமர் லுலு மீது கொச்சி நெடும்பசேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை துவங்கியுள்ளனர். இந்த நிலையில் தான் போலீசாரால் கைது செய்யப்படலாம் என எதிர்பார்த்த ஒமர் லுலு நீதிமன்றத்தில் தனக்கு முன் ஜாமின் வழங்கக்கோரி விண்ணப்பித்தார். இவரது மனுவை பரிசளித்த நீதிமன்றம் ஒமர் லுலுவுக்கு முன்ஜாமீன் வழங்கியுள்ளதுடன் வரும் ஜூன் 6-ம் தேதி இந்த வழக்கு குறித்து விசாரிக்கப்படும் என்று கூறியுள்ளது.