ஒவ்வொரு முறையும் உங்களை தேர்வு செய்வேன் : நயன்தாரா | சிறப்பு தோற்றத்தில் நடிக்க டேவிட் வார்னருக்கு 2.5 கோடி சம்பளம் | 'பேடி' : ராம் சரணின் 16வது படத்தின் தலைப்பு | எல் 2 எம்புரான் - முதல் தகவல் அறிக்கை | வீர தீர சூரன் ரிலீஸில் ஏற்பட்ட சிக்கல் : மன்னிப்பு கேட்ட இயக்குனர் அருண் குமார் | 'டெஸ்ட்' படத்தில் எனது கேரக்டர் ராகுல் டிராவிட்டுக்கு சமர்ப்பணம் : சித்தார்த் | கண்ணப்பா படத்தை கிண்டல் செய்தால் சிவனின் கோபத்திற்கு ஆளாவீர்கள்: நடிகர் ரகு பாபு சாபம் | எனக்கும் காசநோய் பாதிப்பு இருந்தது : சுஹாசினி தகவல் | மம்முட்டிக்காக, மோகன்லால் பிரார்த்தனை செய்த தகவலை நாங்கள் வெளியிடவில்லை : தேவசம் போர்டு மறுப்பு | பிளாஷ்பேக்: வெளியான அனைத்து படங்களும் ஹிட்டான தீபாவளி |
தெலுங்கு திரையுலகில் பிரபல தயாரிப்பாளர்களில் ஒருவர் பந்த்லா கணேஷ். ஜூனியர் என்டிஆர் நடித்த டெம்பர், பாட்ஷா, பவன் கல்யாண் நடித்த கப்பார் சிங் என பல முன்னணி நடிகர்களை வைத்து படங்களை தயாரித்துள்ளார். ஒரு நடிகராகவும் பல படங்களில் இவர் நடித்துள்ளார். இவர் மீது நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட செக் மோசடி வழக்கில் தற்போது இவருக்கு ஒரு வருடம் சிறை தண்டனை என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 2019ல் குண்டூர் மாவட்டத்தை சேர்ந்த ஜெட்டி வெங்கடேஸ்வரா என்பவரிடம் தான் வாங்கிய 95 லட்சம் ரூபாய் தொகைக்காக காசோலை ஒன்றை வழங்கியுள்ளார் பந்த்லா கணேஷ். ஆனால் அவரது கணக்கில் பணம் இல்லை என காசோலை திரும்பி வந்துவிட்டது. இதைத் தொடர்ந்து பந்த்லா கணேஷ் மீது நீதிமன்றத்தில் செக் மோசடி வழக்கு தொடரப்பட்டது.
கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் ஆன நிலையில் தற்போது இந்த வழக்கில் பந்த்லா கணேஷுக்கு ஒரு வருட சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதேசமயம் இது குறித்து அப்பீல் செய்வதற்கு அவருக்கு ஒரு மாத கால அவகாசமும் வழங்கப்பட்டுள்ளது.