ஜி.வி.பிரகாஷின் ‛ஹேப்பி ராஜ்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட துல்கர் சல்மான்! | என்னைப் பற்றி மாதம் ஒரு வதந்தியை பரப்புகிறார்கள்! கோபத்தை வெளிப்படுத்திய மீனாட்சி சவுத்ரி | திருமண கோலத்தில் அம்மாவுடன் எடுத்துக் கொண்ட நெகிழ்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட சமந்தா! | சூர்யா 47வது படத்தின் பூஜையுடன் அறிவிப்பு! | பிளாஷ்பேக்: இரண்டு முறை திரைப்பட வடிவம் பெற்ற மேடை நாடகம் “குமஸ்தாவின் பெண்” | சூர்யா, கார்த்தி உடன் பணிப்புரிந்தது குறித்து கீர்த்தி ஷெட்டி! | ரீ ரிலீஸ் ஆகும் தனுஷின் ‛தேவதையை கண்டேன்' | ‛அகண்டா 2' படத்திற்காக தியாகம் செய்த பாலகிருஷ்ணா, போயப்பட்டி ஸ்ரீனு! | ‛தூரான்தர்' படத்தின் வசூல் நிலவரம்! | ‛திரிஷ்யம் 3' படத்தின் வியாபாரம் குறித்து புதிய அப்டேட்! |

தெலுங்கு திரையுலகில் பிரபல தயாரிப்பாளர்களில் ஒருவர் பந்த்லா கணேஷ். ஜூனியர் என்டிஆர் நடித்த டெம்பர், பாட்ஷா, பவன் கல்யாண் நடித்த கப்பார் சிங் என பல முன்னணி நடிகர்களை வைத்து படங்களை தயாரித்துள்ளார். ஒரு நடிகராகவும் பல படங்களில் இவர் நடித்துள்ளார். இவர் மீது நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட செக் மோசடி வழக்கில் தற்போது இவருக்கு ஒரு வருடம் சிறை தண்டனை என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 2019ல் குண்டூர் மாவட்டத்தை சேர்ந்த ஜெட்டி வெங்கடேஸ்வரா என்பவரிடம் தான் வாங்கிய 95 லட்சம் ரூபாய் தொகைக்காக காசோலை ஒன்றை வழங்கியுள்ளார் பந்த்லா கணேஷ். ஆனால் அவரது கணக்கில் பணம் இல்லை என காசோலை திரும்பி வந்துவிட்டது. இதைத் தொடர்ந்து பந்த்லா கணேஷ் மீது நீதிமன்றத்தில் செக் மோசடி வழக்கு தொடரப்பட்டது.
கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் ஆன நிலையில் தற்போது இந்த வழக்கில் பந்த்லா கணேஷுக்கு ஒரு வருட சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதேசமயம் இது குறித்து அப்பீல் செய்வதற்கு அவருக்கு ஒரு மாத கால அவகாசமும் வழங்கப்பட்டுள்ளது.