மனைவியின் பிரிவால் ஒன்றரை ஆண்டு தினந்தோறும் குடித்தேன் : அமீர்கான் | கண்ணப்பா படத்தை இயக்க தெலுங்கு இயக்குனர்கள் முன் வரவில்லை : விஷ்ணு மஞ்சு ஓப்பன் டாக் | சென்சாருக்கு எதிராக மலையாள திரையுலகினர் நடத்திய நூதன போராட்டம் | நீ பிரச்னைக்குரியவன் அல்ல : வில்லன் நடிகருக்கு மம்முட்டி சொன்ன அட்வைஸ் | யோகி பாபு, ரவி மோகன் படம் ஆகஸ்ட்டில் துவக்கம் | விஜய் சேதுபதி, பூரி ஜெகந்நாத் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது | சாலைக்கு எம்.எஸ்.வி. பெயர் : முதல்வருக்கு நன்றி கூறி மகன் உருக்கம் | என் 5 படங்களின் கதைகளையும் முதலில் இந்த ஹீரோவிடம் தான் கூறினேன் : வெங்கி அட்லூரி | ‛பிளாக்மெயில்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | என் தந்தைக்கு புல் மீல்ஸ்... எனக்கு ஒரு ஸ்பூன் சாதம் : சல்மான்கான் சொன்ன டயட் ரகசியம் |
தெலுங்கு திரையுலகில் பிரபல தயாரிப்பாளர்களில் ஒருவர் பந்த்லா கணேஷ். ஜூனியர் என்டிஆர் நடித்த டெம்பர், பாட்ஷா, பவன் கல்யாண் நடித்த கப்பார் சிங் என பல முன்னணி நடிகர்களை வைத்து படங்களை தயாரித்துள்ளார். ஒரு நடிகராகவும் பல படங்களில் இவர் நடித்துள்ளார். இவர் மீது நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட செக் மோசடி வழக்கில் தற்போது இவருக்கு ஒரு வருடம் சிறை தண்டனை என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 2019ல் குண்டூர் மாவட்டத்தை சேர்ந்த ஜெட்டி வெங்கடேஸ்வரா என்பவரிடம் தான் வாங்கிய 95 லட்சம் ரூபாய் தொகைக்காக காசோலை ஒன்றை வழங்கியுள்ளார் பந்த்லா கணேஷ். ஆனால் அவரது கணக்கில் பணம் இல்லை என காசோலை திரும்பி வந்துவிட்டது. இதைத் தொடர்ந்து பந்த்லா கணேஷ் மீது நீதிமன்றத்தில் செக் மோசடி வழக்கு தொடரப்பட்டது.
கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் ஆன நிலையில் தற்போது இந்த வழக்கில் பந்த்லா கணேஷுக்கு ஒரு வருட சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதேசமயம் இது குறித்து அப்பீல் செய்வதற்கு அவருக்கு ஒரு மாத கால அவகாசமும் வழங்கப்பட்டுள்ளது.