வேண்டுமென்றே சர்ச்சை... நீக்காவிட்டால் சட்ட நடவடிக்கை: ராஷ்மிகா எச்சரிக்கை | சிம்புவை அணுகிய சூர்யா 47 படக்குழு | பிளாஷ்பேக்: பாடலாசிரியராக, வசனகர்த்தாவாக கலையுலகின் கவனம் ஈர்த்த இயக்குநர் கே எஸ் கோபாலகிருஷ்ணன் | காமெடி கலந்த க்ரைம் த்ரில்லர் படங்கள்: இந்த வார ஓடிடி வரவுகள்...! | மகேஷ் பாபு ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட பவன் கல்யாண் பட இயக்குனர் | தள்ளிப்போகிறதா 'பேட்ரியாட்' ரிலீஸ் ? தேதி குறிப்பிடாமல் வெளியான போஸ்டர் | சாய் பல்லவி நடித்துள்ள ஏக் தின் ஹிந்தி படத்தின் டிரைலர் வெளியானது | மும்பை துப்பாக்கிச்சூடு சம்பவத்தை மையப்படுத்தி உருவாகும் படத்தில் செவிலியராக நடிக்கும் கங்கனா | என் மனைவி ஆர்த்தி இல்லை என்றால் தயாரிப்பாளராகி இருக்க மாட்டேன் : சிவகார்த்திகேயன் | ஸ்வேதா மேனன் மீதான வழக்கை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம் |

முன்னணி இசையமைப்பாளர்களுக்கு அடுத்ததாக இரண்டாம் கட்டத்தில் இருக்கும் சில இசையமைப்பாளர்களில் கொஞ்சம் பிஸியாக இயங்கி வருபவர் இசையமைப்பாளர் ஷான் ரகுமான். கடந்த 2019ல் மலையாளத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான 'ஒரு அடார் லவ்' என்கிற படத்திற்கு இவர் தான் இசையமைத்திருந்தார். அந்த படத்தில் 'மாணிக்க மலராய பூவி' என்கிற பாடல் மட்டுமல்லாது அந்தப்பாடலில் நடித்த நடிகை பிரியா வாரியர் புருவ அழகி என பெயர் பெற்று பிரபலமானதும் அனைவரும் அறிந்தது தான்.
அதே படத்தில் 'ப்ரீக் பெண்ணே' என்கிற இன்னொரு பாடலும் ஹிட் அடித்தது. இந்த பாடலை சத்யஜித் என்பவர் பாடியிருந்தார். அவரே இந்த பாடலை எழுதியும் இருந்தார். இந்த நிலையில் இந்த பாடலுக்கான பெருமையை இசையமைப்பாளர் ஷான் ரகுமான் தனக்கு கிடைக்காமல் பறித்துக் கொண்டார் என தனது சமீபத்திய பேட்டிகளில் குற்றம் சாட்டி வந்தார் சத்யஜித். இந்த நிலையில் இது பற்றி ஷான் ரகுமான் ஒரு விளக்கம் அளித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறும்போது, “ஒரு அடார் லவ் படத்தை துவங்கும்போது இயக்குனர் ஒமர் லுலு சோசியல் மீடியாவில் தான் ஒரு பாடலை பார்த்ததாகவும் அந்த பாடலை இந்த படத்தில் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் என்னிடம் கூறி இந்த பாடலின் தயாரிப்பாளராக நீங்கள் இருங்கள் என்று சொன்னார். அதன்பிறகு தான் இந்த சத்யஜித்தை வரவழைத்து அவரையே பாட வைத்து இந்த பாடலை பதிவு செய்தோம். இந்த படத்தின் பாடல்களை வெளியிட்ட இசை வெளியீட்டு நிறுவனத்திடம் கூட பாடலின் கம்போசர் என சத்யஜித் பெயரையே குறிப்பிட சொல்லி இருந்தேன்.
ஆனால் இசை வெளியீட்டு நிறுவனம் அவர்களாகவே அனைத்து பாடல்களுக்கும் என்னையே கம்போசர் என்கிற அளவில் குறிப்பிட்டு விட்டார்கள். அது மட்டுமல்ல யூடியூபில் பாடல்கள் வெளியாகும்போதும் அதையே தான் குறிப்பிட்டும் வருகின்றனர். இதில் என் கையில் எதுவும் இல்லை. இதை சத்யஜித் தவறாக எடுத்துக் கொண்டால் நான் என்ன செய்வது ?
இப்படி ஒரு பாடல் இந்த படத்தில் இடம் பெறாமல் போயிருந்தால், அது சோசியல் மீடியாக்களில் வெறும் ஆயிரக்கணக்கான நபர்களால் மட்டுமே பார்க்கப்பட்டு அத்துடன் காணாமல் போயிருக்கும். இதை சத்யஜித் உணர்ந்து கொள்ள வேண்டும். இதுபோன்று அறிமுகப்படுத்தப்படும் பாடகர்கள், பாடலாசிரியர்கள் குற்றம் சாட்ட துவங்கினால் புதியவர்களை அறிமுகப்படுத்த வேண்டுமா என்கிற எண்ணம் தான் தோன்றும்: என்று கூறியுள்ளார்.




