Advertisement

சிறப்புச்செய்திகள்

கன்னட ஹீரோ மீது கொடூர தாக்குதல் | சின்னத்திரை இயக்குனர்கள் சங்கத் தலைவராக மங்கை அரிராஜன் வெற்றி | புதிய டான்ஸ் ஸ்டூடியோ தொடங்கினார் கிகி சாந்தனு | பிளாஷ்பேக் : இளையராஜாவுக்கு சினிமாவில் 48வது பிறந்தநாள் | தமயந்திக்கு கிளைமாக்ஸ் எழுதிய சீரியல் குழுவினர் : அதிர்ச்சியில் ரசிகர்கள் | குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய காரணம் என்ன? - மனம் திறக்கும் வெங்கடேஷ் பட் | ஜோதிடரான டிவி நடிகர் கோலங்கள் ஸ்ரீதர் | ஹெலிகாப்டரில் வந்து ஓட்டளித்த பவன் கல்யாண் | மலையாளத்தில் கதிர் நடிக்கும் 'மீச' திரைப்படம் விரைவில் துவக்கம் | மம்முட்டியுடனான அரசியல் படம் நிறுத்தம் : பிரித்விராஜ் வெளிப்படையாக அறிவிப்பு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

இறுதிக்கட்டத்தை எட்டிய அய்யப்பனும் கோஷியும் இயக்குனரின் கனவுப்படம்

15 ஜூன், 2023 - 10:50 IST
எழுத்தின் அளவு:
Director-Sachy's-dream-movie-to-be-come-true

கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு மலையாளத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் அய்யப்பனும் கோஷியும்.. இந்தப்படத்தை பிரபல மலையாள கதாசிரியர் சச்சிதானந்தம் என்கின்ற சாச்சி இயக்கி இருந்தார். இந்தப்படம் வெளியான சில மாதங்களில் 49 வயதே ஆன சாச்சி திடீரென மரணமடைந்தார்.. அந்த சமயத்தில் அவர் அடுத்ததாக தனது கனவுப்படமாக எழுத்தாளர் ஜி.ஆர்.இந்துகோபன் எழுதிய விலாயத் புத்தா என்கிற நாவலை சினிமாவுக்காக மாற்றும் வேலையை செய்து முடித்திருந்தார். ஆனாலும் அவரது கனவு நனவாகாமலேயே மரணத்தை தழுவினார்.

அதே சமயம் நடிகர் பிரித்விராஜ் இந்த படத்தை எப்படியும் எடுத்தே தீருவது என முடிவு செய்து இந்தப்படத்தை இயக்கும் வாய்ப்பை ஜெயன் நம்பியார் என்கிற அறிமுக இயக்குநருக்கு வழங்கினார். இந்த ஜெயன் நம்பியார் ஏற்கனவே பிரித்விராஜ் இயக்குனராக அறிமுகமான 'லூசிபர்' படத்தில் அவரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர்.. அதுமட்டுமல்ல, சாச்சி இயக்கிய அனார்கலி மற்றும் அய்யப்பனும் கோஷியும் படங்களிலும் கூட முதன்மை இணை இயக்குனராக பணியாற்றியவர் தான்.

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பே இந்த படம் தொடங்கி அவ்வப்போது இடைவெளி விட்டுவிட்டு படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. பிரித்விராஜ் ஒரு பக்கம் டைரக்சன் மற்றும் இன்னொரு பக்கம் தெலுங்கு, இந்தி உள்ளிட்ட படங்களிலும் பிஸியாக நடித்து வருவதால் இந்த படத்தின் மீதி படப்பிடிப்பு தாமதம் ஆகி வந்தது. இந்த நிலையில் 50 நாட்கள் கொண்ட இறுதிக்கட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கிறது என்கிற தகவல் வெளியாகியுள்ளது.

இந்த படத்தில் டபுள் மோகனன் என்கிற கதாபாத்திரத்தில் பிரித்விராஜ் நடித்து வருகிறார். இதுவும் சாச்சி கதை எழுதிய டிரைவிங் லைசென்ஸ் மற்றும் அய்யப்பனும் கோஷியும் படங்கள் போல ஈகோ பின்னணியில் உருவாகி வருகிறது என்று சொல்லப்படுகிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ஆதரவற்ற குழந்தைகள் ஆதிபுருஷ் படம் பார்க்க 2500 டிக்கெட்டுகள் வாங்கிய மஞ்சு மனோஜ் தம்பதிஆதரவற்ற குழந்தைகள் ஆதிபுருஷ் படம் ... விமானத்தில் வாலிபருக்கு செக்ஸ் டார்ச்சர் : மலையாள நடிகர் விநாயகன் மீது பரபரப்பு புகார் விமானத்தில் வாலிபருக்கு செக்ஸ் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in