அஸ்வத் மாரிமுத்துவிற்கு விண்ணப்பித்த 15 ஆயிரம் உதவி இயக்குனர்கள்! | கவுதம் ராம் கார்த்திக் 19வது படத்தின் படப்பிடிப்பு துவங்கியது! | ''இப்போ ரிஸ்க் எடுக்கலைனா.. எப்பவும் இல்ல'': சினிமா என்ட்ரி குறித்து மனம்திறந்த காவ்யா அறிவுமணி | த்ரிவிக்ரம் இயக்கத்தில் தனுஷ்? | குட் பேட் அக்லி - முன்பதிவு நிலவரம் என்ன? | அஜித், தனுஷ் கூட்டணி அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது! | 'ரெட்ட தல' படத்தின் புதிய அப்டேட்! | ராஜமவுலியுடன் இணையாதது ஏன்? சிரஞ்சீவி விளக்கம் | சென்னையை விட்டு சென்றது ஏன்? சசிகுமார் விளக்கம் | தமிழிலும் வெளியாகும் 'இத்திக்கர கொம்பன்' |
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர் சிரஞ்சீவியின் மகனாக வாரிசு நடிகராக திரையுலகில் நுழைந்தவர் நடிகர் ராம்சரண். இன்று தென்னிந்தியாவையும் தாண்டி பாலிவுட் அளவில் வரவேற்பை பெற்ற மிகப்பெரிய நடிகராக தன்னை செதுக்கி கொண்டுள்ளார்.. இவருக்கும் அப்போலோ குழுமத்தை சேர்ந்த உபாசனாவுக்கும் கடந்த 2012ம் வருடம் திருமணம் நடைபெற்றது.
இந்தநிலையில் உபாசனா கர்ப்பமாக இருக்கும் மகிழ்ச்சியான செய்தியை கடந்த டிசம்பர் மாதம் குடும்பத்தினர் வெளியிட்டனர். இதைத்தொடர்ந்து தம்பதியினர் இருவருக்கும் ரசிகர்களிடமிருந்தும் திரையுலகத்தினரிடம் இருந்தும் இப்போதும் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.. சமீபத்தில் உபாசனாவின் வளைகாப்பு நிகழ்ச்சி அவர்கள் நெருங்கிய நண்பர்கள் கலந்து கொள்ள நடைபெற்றது. இதில் நடிகர் அல்லு அர்ஜுனும் கலந்துகொண்டு உபாசனாவை வாழ்த்தியுள்ளார். மேலும் அவருடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ராம்சரனின் பிறந்தநாள் கொண்டாட்டம் நடைபெற்றபோது அதில் அல்லு அர்ஜுன் கலந்து கொள்ளவில்லை என்கிற குறை ராம்சரண் குடும்பத்தினர் மத்தியில் இருந்ததாக சொல்லப்பட்டு வந்தது.. ராம்சரண் ரசிகர்களும் அதுகுறித்து தங்களது ஏமாற்றத்தை வெளிப்படுத்தி அல்லு அர்ஜுனை விமர்சித்து வந்தனர். தற்போது இந்த வளைகாப்பு நிகழ்வில் கலந்துகொண்டு அந்த மனக்குறையை போக்கிவிட்டார் அல்லு அர்ஜுன்.