'ரெய்டு-2' படத்தில் தமன்னாவின் 'நாஷா' கிளாமர் பாடல் வெளியீடு! | சோசியல் மீடியாவில் விமர்சித்த ரசிகர்களுக்கு திரிஷா கொடுத்த கமெண்ட்! | வேறு வழியின்றி விஜய் படத்தை இயக்கினேன் ; தங்கர் பச்சான் மகன் பட விழாவில் எஸ்.ஏ சந்திரசேகர் பரபரப்பு பேச்சு | தெலுங்கில் தனது முதல் படப்பிடிப்பை நிறைவு செய்த சோனாக்ஷி சின்ஹா | திரில்லரும் அல்ல.. பீல் குட் படமும் அல்ல.. 'தொடரும்' படம் குறித்து இயக்குனர் புது தகவல் | காருக்கு பேன்சி நம்பர் வாங்க போட்டி ; குஞ்சாக்கோ போபனுக்கு லக்.. நிவின்பாலிக்கு செக் | அஜித் குறித்து நெகிழ்ச்சி பதிவிட்ட பிரியா பிரகாஷ் வாரியர் | 'மதராஸி' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய அப்டேட்! | ராகவா லாரன்ஸின் 'காஞ்சனா 4, பென்ஸ்' படங்களின் நிலவரம் என்ன? | சினிமா சங்கப் பிரச்னைகள் : தயாரிப்பாளர் சங்கம் போலீசில் புகார் |
கடந்த 15 வருடங்களுக்கு முன்பு மலையாளத்தில் மம்முட்டி நடித்த பிக்-பி என்கிற கேங்ஸ்டர் படத்தை இயக்கியவர் இயக்குனர் அமல் நீரத். அதைத்தொடர்ந்து பிரித்விராஜ் நடித்த அன்வர், சமீபத்தில் மீண்டும் மம்முட்டியின் நடிப்பில் வெளியான பீஷ்ம பர்வம் ஆகிய படங்களை இயக்கியுள்ளார். கடந்த சில நாட்களாக கேரளாவில் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள காஞ்சிரமட்டம் பகுதியில் உள்ள கே ஆர் நாராயணன் தேசிய காட்சி அறிவியல் மற்றும் கலை கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் கல்லூரியின் டைரக்டர் ஆன சங்கர் மோகன் என்பவரை மாற்றக்கோரி உண்ணாவிரத போராட்டம் நடத்தினார்கள். அதைத்தொடர்ந்து கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் மாணவர்கள் தொடர்ந்து போராடி வருகிறார்கள்.
இந்த நிலையில் இந்த மாணவர்களுக்கு ஆர்ட் ஆப் புரொடெஸ்ட் என்கிற தலைப்பில் வகுப்பு எடுப்பதற்காக இயக்குனர் அமல் நீரத் கல்லூரிக்கு வந்தார். ஆனால் அவரை போலீசாரும் கல்லூரி நிர்வாகத்தை சேர்ந்த பாதுகாவலர்களும் உள்ளே அனுமதிக்க மறுத்தனர். இதை தொடர்ந்து கல்லூரிக்கு வெளியே உள்ள ஒரு அரங்கு ஒன்றில் மாணவர்களை அமர வைத்து பாடம் நடத்தினார் அமல் நீரத். மேலும் மாணவர்களின் போராட்டத்திற்கு தனது ஆதரவையும் தெரிவித்து விட்டு சென்றார். மலையாள சினிமாவில் பிரபல இயக்குனரும் எழுத்தாளருமான அடூர் கோபாலகிருஷ்ணன் சம்பந்தப்பட்ட சங்கர் மோகனுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த நிலையில் இயக்குனர் அமல் நீரத் மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.