ஹிந்தி வெப் சீரிஸில் நடிக்க மும்பை சென்ற சமந்தா | கஜினி படம் ஏற்படுத்திய பெரும் தாக்கம் : சுனைனா நெகிழ்ச்சி | எப்போதுமே டிவி சீரியல்களில் நடிக்க மாட்டேன்: நடிகை சுமன் ராணா திட்டவட்டம் | கவனமாக இருங்கள் : ராஜ்கிரண் எச்சரிக்கை பதிவு | தெலுங்கில் ஜன., 31ல் வெளியாகும் மதகஜராஜா | சுதா கொங்கரா, சிவகார்த்திகேயன் பட தலைப்பு ‛பராசக்தி' | மஞ்சுவாரியர் படத்தை இலவசமாக ஆன்லைனில் ரிலீஸ் செய்ய போவதாக இயக்குனர் அறிவிப்பு | மோகன்லாலை ஒரு மணி நேரம் பேட்டி எடுத்த கேரள அமைச்சர் | 2025ல் மலையாளத்தில் முதல் 50 கோடி வசூல் படமாக பதிவு செய்த 'ரேகசித்திரம்' | கிஸ் படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது |
கடந்த 15 வருடங்களுக்கு முன்பு மலையாளத்தில் மம்முட்டி நடித்த பிக்-பி என்கிற கேங்ஸ்டர் படத்தை இயக்கியவர் இயக்குனர் அமல் நீரத். அதைத்தொடர்ந்து பிரித்விராஜ் நடித்த அன்வர், சமீபத்தில் மீண்டும் மம்முட்டியின் நடிப்பில் வெளியான பீஷ்ம பர்வம் ஆகிய படங்களை இயக்கியுள்ளார். கடந்த சில நாட்களாக கேரளாவில் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள காஞ்சிரமட்டம் பகுதியில் உள்ள கே ஆர் நாராயணன் தேசிய காட்சி அறிவியல் மற்றும் கலை கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் கல்லூரியின் டைரக்டர் ஆன சங்கர் மோகன் என்பவரை மாற்றக்கோரி உண்ணாவிரத போராட்டம் நடத்தினார்கள். அதைத்தொடர்ந்து கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் மாணவர்கள் தொடர்ந்து போராடி வருகிறார்கள்.
இந்த நிலையில் இந்த மாணவர்களுக்கு ஆர்ட் ஆப் புரொடெஸ்ட் என்கிற தலைப்பில் வகுப்பு எடுப்பதற்காக இயக்குனர் அமல் நீரத் கல்லூரிக்கு வந்தார். ஆனால் அவரை போலீசாரும் கல்லூரி நிர்வாகத்தை சேர்ந்த பாதுகாவலர்களும் உள்ளே அனுமதிக்க மறுத்தனர். இதை தொடர்ந்து கல்லூரிக்கு வெளியே உள்ள ஒரு அரங்கு ஒன்றில் மாணவர்களை அமர வைத்து பாடம் நடத்தினார் அமல் நீரத். மேலும் மாணவர்களின் போராட்டத்திற்கு தனது ஆதரவையும் தெரிவித்து விட்டு சென்றார். மலையாள சினிமாவில் பிரபல இயக்குனரும் எழுத்தாளருமான அடூர் கோபாலகிருஷ்ணன் சம்பந்தப்பட்ட சங்கர் மோகனுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த நிலையில் இயக்குனர் அமல் நீரத் மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.