தேசிய விருது வென்றவர்களுக்கு கமல்ஹாசன் வாழ்த்து | வன்முறை, ரத்தம் தெறிக்கும் காட்சிகள் : ரஜினியின் 'கூலி' படத்திற்கு ‛ஏ' சான்று | பிரதீப் ரங்கநாதன் பாணியில் அபிஷன் ஜீவிந்த் நாளை மறுநாள் ஹீரோ ஆகிறார் | பிட்னஸ் ரகசியத்தை வெளியிட்ட சமந்தா | ஜெயிலர் 2 படப்பிடிப்பு : மீண்டும் கேரளா செல்லும் ரஜினி | 3 விருதுகளை வென்ற ‛பார்க்கிங்' : ஷாரூக்கான், ராணி முகர்ஜி, ஜிவி பிரகாஷிற்கு தேசிய விருது | ஒரே நாளில் இரண்டு இலங்கைத் தமிழ் ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் | அமெரிக்காவில் ஜேசுதாஸை சந்தித்த ஏஆர் ரஹ்மான் | டிரண்டாகும் மதராஸி படத்தின் சலம்பல பாடல் | கூலியால் தள்ளிப்போன எல்ஐகே பட அறிவிப்பு |
மலையாள சினிமாவில் செல்லமாக பப்பு என்று அழைக்கப்பட்டவர் ஒளிப்பதிவாளர் சுதீஷ் பப்பு. துல்கர் சல்மான் நடித்த செகண்ட் ஷோ படத்தின் மூலம் ஒளிப்பதிவாளரான பப்பு அதன்பிறகு கூதரா, ரோஸ் கிடாரினால், ஈடா, நான் ஸ்டீவ் லோபஸ். உள்பட முக்கியமான படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தார். கடைசியாக மஜூ இயக்கி, சன்னி வெய்ன் நடித்த 'அப்பன்' படத்திற்கு ஒளிப்பதிவு செய்தார்.
44 வயதே ஆன பப்பு அமிலாய்டோசிஸ் என்ற அரிய நோயால் பாதிக்கப்பட்டார். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பப்பு நேற்று திடீரென மரணம் அடைந்தார். பப்புவின் மரணம் மலையாள திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திரையுலக பிரமுகர்கள் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.