ஒரு ஆணை நிம்மதியாக வாழ விடுங்கள் : ரவி மோகன் பதிவு வைரல் | ஜனநாயகனுக்கு எதிராக விநியோகஸ்தர்கள்: பணத்தை திரும்பி கேட்கிறார்களா? | 300 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'துரந்தர் 2' டிரைலர் | போர்சூழல் எதிரொலி : செய்தி சேனல்களுக்கு டிஆர்பி ரேட்டிங் வெளியிட தடை | தமிழில் நடிக்கும் குஷி ரவி | கடவுள் பெயரில் டைட்டில்கள் : கண்டிப்பு காட்டும் தணிக்கை குழு | பிளாஷ்பேக்': சினிமாவில் ஜெயிக்க முடியாத லட்சிய நடிகரின் மகன் | பிளாஷ்பேக் : ஹேமமாலினிக்கு செட்ட ஆகாத தமிழ் சினிமா | செல்வராகவன் அக்காவாக மாறிய கவுசல்யா | திருவண்ணாமலையில் படமாக்கப்பட்ட 'கொலைச் சேவல்' |

த்ரிஷ்யம் இரண்டு பாகங்கள் மற்றும் டுவல்த் மென் ஆகிய படங்களின் வெற்றியை தொடர்ந்து மோகன்லால் தற்போது நான்காவது முறையாக ஜீத்து ஜோசப் இயக்கத்தில் ராம் என்கிற படத்தில் நடித்து வருகிறார். கொரோனா முதல் அலைக்கு முன்பே துவங்கப்பட்ட இந்த படம் வெளிநாடுகளில் படப்பிடிப்பு நடத்த வேண்டி இருந்ததால் கடந்த இரண்டு வருடங்களாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
தற்போது லண்டனில் இதன் படப்பிடிப்பு மீண்டும் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் படப்பிடிப்பு ஓய்வு நேரத்தில் தாங்கள் தங்கி இருந்த இடத்தில் சக நடிகர்களான பிரித்விராஜின் சகோதரர் இந்திரஜித் மற்றும் நடிகை சம்யுக்தா மேனன் ஆகியோருக்கு மோகன்லால் மாட்டு இறைச்சி கறி சமைத்துக் கொடுக்கும் வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி உள்ளது.