''நான் அதிர்ஷ்டசாலி'': நல்ல நண்பராக மணிகண்டன் கிடைத்த மகிழ்ச்சியில் ஷான்வி | 'கேம் சேஞ்சர்'--ல் விட்டதை 'பெத்தி'யில் பிடித்த ராம் சரண் | தயாரிப்பாளர் எம்.ராமநாதன் காலமானார் | குட் பேட் அக்லி - எந்த விழாவும் இல்லை, எந்த சந்திப்பும் இல்லை | ஆரம்பித்த இடத்திற்கே மீண்டும் வந்துள்ள ஹரி | மாரீசன் படத்தில் கோவை சரளா | உங்கள் ஊகங்களை நிறுத்துங்கள்: ரசிகருக்கு அட்வைஸ் செய்த மாளவிகா மோகனன் | 'சந்தோஷ்' படத்தை வெளியில் திரையிடுவேன் : பா ரஞ்சித் அடாவடி | பிளாஷ்பேக்: பைந்தமிழ் கற்பதில் தாமதம்; பட வாய்ப்பை இழந்த நடிகை பண்டரிபாய் | மே 16ல் ரீ-ரிலீஸாகும் ஆட்டோகிராப் |
மலையாள சினிமாவின் முதல் இயக்குனர் ஜே.சி.டேனியல். இவர் பெயரில் செயல்பட்டு வரும் அறக்கட்டளை ஆண்டுதோறும் சிறந்த சினிமா கலைஞர்களை தேர்வு செய்து விருது வழங்கி வருகிறது. அந்த வரிசையில் 13வது ஜே.சி.டேனியல் அறக்கட்டளை விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் கிரிஷாந்த் ஆர் கே இயக்கிய 'அவச வ்யூஹம்' சிறந்த படமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த இயக்குனருக்கான விருதை 'மதுரம்' படத்திற்காக அகமது கபீர் பெறுகிறார். மதுரம், நயத்து, பிரீடம் பைட் ஆகிய படங்களில் நடித்ததற்காக ஜோஜு ஜார்ஜ் சிறந்த நடிகராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். 'உடல்' படத்தில் நடித்ததற்காக துர்கா கிருஷ்ணா சிறந்த நடிகையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
உன்னி முகுந்தன் 'மேப்படியான்' படத்தில் நடித்ததற்காக சிறப்பு நடுவர் குழுவின் விருதை பெறுகிறார். ஹோலி பாதர் படத்தை இயக்கிய விஷ்ணு மோகன் அறிமுக இயக்குனருக்கான விருதை பெறுகிறார்.