அடுத்த சிம்பொனி: இளையராஜா அறிவிப்பு | 'மகுடம்' படத்தின் இயக்குனர் ஆனார் விஷால்; அவரே அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் | அட்லி - அல்லு அர்ஜூன் படம் ஒரு சினிமா புரட்சி! ரன்வீர் சிங் வெளியிட்ட தகவல் | 2025ல் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாகும் இறுதி படம் 'தி கேர்ள் ப்ரெண்ட்' | துல்கர் சல்மானின் காந்தா நவம்பர் 14ம் தேதி வெளியாகிறது! | நான் விருது வாங்கினாலும் குப்பை தொட்டியில் தான் போடுவேன்! : விஷால் | முதல் முறையாக முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் சம்யுக்தா! | பிளாஷ்பேக்: தெவிட்டாத திரையிசைப் பாடல்கள் தந்த தித்திக்கும் “தீபாவளி” நினைவுகள் | டேட்டிங் ஆப் மூலம் இரண்டாவது திருமணம் செய்த வசந்த பாலன் பட நாயகி | கதாநாயகன் ஆனார் 'சிறகடிக்க ஆசை' மனோஜ்! |
மலையாள சினிமாவின் முதல் இயக்குனர் ஜே.சி.டேனியல். இவர் பெயரில் செயல்பட்டு வரும் அறக்கட்டளை ஆண்டுதோறும் சிறந்த சினிமா கலைஞர்களை தேர்வு செய்து விருது வழங்கி வருகிறது. அந்த வரிசையில் 13வது ஜே.சி.டேனியல் அறக்கட்டளை விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் கிரிஷாந்த் ஆர் கே இயக்கிய 'அவச வ்யூஹம்' சிறந்த படமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த இயக்குனருக்கான விருதை 'மதுரம்' படத்திற்காக அகமது கபீர் பெறுகிறார். மதுரம், நயத்து, பிரீடம் பைட் ஆகிய படங்களில் நடித்ததற்காக ஜோஜு ஜார்ஜ் சிறந்த நடிகராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். 'உடல்' படத்தில் நடித்ததற்காக துர்கா கிருஷ்ணா சிறந்த நடிகையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
உன்னி முகுந்தன் 'மேப்படியான்' படத்தில் நடித்ததற்காக சிறப்பு நடுவர் குழுவின் விருதை பெறுகிறார். ஹோலி பாதர் படத்தை இயக்கிய விஷ்ணு மோகன் அறிமுக இயக்குனருக்கான விருதை பெறுகிறார்.