சிவாஜி வீடு பிரபுவிற்கு சொந்தம் : வீட்டை ஜப்தி செய்யும் உத்தரவு ரத்து | பிளாஷ்பேக்: மேடை நாடகம், வெள்ளித்திரை இரண்டிலும் முத்திரை பதித்த “வியட்நாம் வீடு” | இப்போதைக்கு நான் சாக விரும்பவில்லை : விரக்தியில் பிரபல பாடகர் | நாகசைதன்யா நடிக்கும் புதிய வெப்சீரிஸ் ‛மாய சபா' | தொடரும் வில்லத்தனம் : வெளியான மம்முட்டியின் கலம்காவல் இரண்டாவது லுக் | மோகன்லாலுக்கு பரிசாக கால்பந்து வீரர் மெஸ்ஸி கையெழுத்திட்டு அனுப்பிய ஜெர்ஸி | மலையாள வில்லன் நடிகர் மீதான போதை வழக்கில் போலீசாருக்கு புதிய சிக்கல் | மாரி செல்வராஜ் - தனுஷ் கூட்டணியில் ஏஆர் ரஹ்மான் | குட் பேட் அக்லி 11 நாள் வசூல் முழு விவரம் | காதலருடன் (?) திருப்பதியில் தரிசனம் செய்த சமந்தா |
மலையாள திரையுலகில் குணச்சித்திர நடிகராக அறிமுகமாகி கடந்த சில வருடங்களில் கதையின் நாயகனாக நடிக்கும் அளவிற்கு உயர்ந்தவர் நடிகர் ஜோஜூ ஜார்ஜ். கடந்த 4 வருடங்களுக்கு முன்பு மலையாளத்தில் இவர் கதையின் நாயகனாக நடித்து வெளியான ஜோசப் என்கிற படம் ஹிட்டாகி இவருக்கு மிகப் பெரிய நட்சத்திர அந்தஸ்தை கொடுத்தது. தமிழில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்த ஜகமே தந்திரம் படத்திலும் இவர் முக்கியமான வேடத்தில் நடித்திருந்தார்.
இந்த நிலையில் இவர் கேரளாவில் வாகமன் பகுதியில் முறையான அனுமதியின்றி அனுமதி மறுக்கப்பட்ட விவசாய நிலத்தில் தனது ஜீப்பில் ரேஸில் ஈடுபட்டார் என்று அந்த பகுதியை சேர்ந்த மாணவர் சங்கத்தினர் போலீசில் அவர் மீது புகார் அளித்தனர். மேலும் ஜோஜு ஜார்ஜ் ரேஸில் ஈடுபடும் வீடியோ ஒன்றும் சோசியல் மீடியாவில் வெளியானது.
இதையடுத்து வண்டிப்பெரியார் போக்குவரத்து போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து அவரது வாகன உரிமம் உள்ளிட்ட டாக்குமென்ட்களை எடுத்துக்கொண்டு நேரில் ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். கடந்த வருடம் இதே போன்று நடிகர் துல்கர் சல்மான் மற்றும் பிரித்திவிராஜ் ஆகிய இருவரும் ரேஸில் ஈடுபட்டதாக ஒரு வீடியோ வெளியானாலும் அது அவர்கள் தான் என உறுதியாக தெரியாததால் அவர்கள் வழக்கில் இருந்து தப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.