தணிக்கை நடைமுறையில் உள்ள சிக்கல் : 'பராசக்தி' வெளியீடும் தள்ளிப் போகலாம் | பெண் இயக்குனர் இயக்கிய படமா? ராம்கோபால் வர்மா ஆச்சரியம் | ஜனநாயகன் ரிலீஸ் சிக்கல் : விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்த திரைப்பிரபலங்கள் | தெலுங்கில் மாஸ் காட்டிய 'அகண்டா-2' முதல்... பீல் குட் மூவி 'அங்கம்மாள்' வரை இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | 'ஜனநாயகன்' தள்ளிப்போனதால் நிகிலா விமல் படத்துக்கு அடித்த ஜாக்பாட் | 'பராசக்தி' படத்தில் பசில் ஜோசப் ; உறுதி செய்த சிவகார்த்திகேயன் | சிறப்பு பாடல்களுக்கு இனிமேல் நடனமாட மாட்டேன்!- ஸ்ரீ லீலா வெளியிட்ட தகவல் | 'பராசக்தி'யில் யுவன் சங்கர் ராஜா பாடிய 'சேனைக் கூட்டம்' பாடல் வெளியானது! | கார்த்தியின் 'வா வாத்தியார்' பொங்கலுக்கு திரைக்கு வருகிறதா? | 'தக் லைப்' விவகாரம் : அப்போது குரல் கொடுக்காத விஜய்.. |

இறுதிச்சுற்று படத்தின் வெற்றியை தொடர்ந்து சூர்யா நடித்த சூரரைப்போற்று படத்தையும் மிகப்பெரிய வெற்றிப்படமாக கொடுத்தார் இயக்குனர் சுதா கொங்கரா. ஏர் டெக்கான் நிறுவனத்தை உருவாக்கியவரும் இந்திய ராணுவத்தில் கேப்டனாக பணியாற்றி ஓய்வு பெற்றவருமான ஜி.ஆர். கோபிநாத் என்பவரின் வாழ்க்கையை தழுவி இந்தப்படம் உருவாக்கப்பட்டு இருந்தது.
நிஜ மனிதரின் வாழ்க்கை என்றாலும் அதை எதார்த்தமாக பிரதிபலிக்க வேண்டும் என்பதற்காக சில காட்சிகளில் சூர்யா கெட்ட வார்த்தைகளை பேச வேண்டி இருந்ததாம்.. ஆனால் படப்பிடிப்பு தளத்தில் அந்த வார்த்தைகளை பேச ரொம்பவே கூச்சப்பட்டு தயங்கி நின்றாராம்..
அதேசமயம் அப்படியே நேர்மாறாக டப்பிங் ஸ்டுடியோவில் படு வேகமாக, சத்தமாக அந்த வார்த்தைகளை பேசினாராம் சூர்யா. உடனே அவரை அமைத்திப்படுத்திய சுதா கொங்கரா, நீங்கள் இப்படி பேசுவதை உங்கள் தந்தை பார்த்தால் என் பையனை கெட்டவார்த்தை பேசவைத்து விட்டாயே என என்னை திட்ட போகிறார் என பயந்தாராம். சமீபத்திய பேட்டி ஒன்றில் இந்த தகவலை பகிர்ந்து கொண்டுள்ளார் இயக்குனர் சுதா கொங்கரா.