பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

இறுதிச்சுற்று படத்தின் வெற்றியை தொடர்ந்து சூர்யா நடித்த சூரரைப்போற்று படத்தையும் மிகப்பெரிய வெற்றிப்படமாக கொடுத்தார் இயக்குனர் சுதா கொங்கரா. ஏர் டெக்கான் நிறுவனத்தை உருவாக்கியவரும் இந்திய ராணுவத்தில் கேப்டனாக பணியாற்றி ஓய்வு பெற்றவருமான ஜி.ஆர். கோபிநாத் என்பவரின் வாழ்க்கையை தழுவி இந்தப்படம் உருவாக்கப்பட்டு இருந்தது.
நிஜ மனிதரின் வாழ்க்கை என்றாலும் அதை எதார்த்தமாக பிரதிபலிக்க வேண்டும் என்பதற்காக சில காட்சிகளில் சூர்யா கெட்ட வார்த்தைகளை பேச வேண்டி இருந்ததாம்.. ஆனால் படப்பிடிப்பு தளத்தில் அந்த வார்த்தைகளை பேச ரொம்பவே கூச்சப்பட்டு தயங்கி நின்றாராம்..
அதேசமயம் அப்படியே நேர்மாறாக டப்பிங் ஸ்டுடியோவில் படு வேகமாக, சத்தமாக அந்த வார்த்தைகளை பேசினாராம் சூர்யா. உடனே அவரை அமைத்திப்படுத்திய சுதா கொங்கரா, நீங்கள் இப்படி பேசுவதை உங்கள் தந்தை பார்த்தால் என் பையனை கெட்டவார்த்தை பேசவைத்து விட்டாயே என என்னை திட்ட போகிறார் என பயந்தாராம். சமீபத்திய பேட்டி ஒன்றில் இந்த தகவலை பகிர்ந்து கொண்டுள்ளார் இயக்குனர் சுதா கொங்கரா.