Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

தில் தடக்னே டூ (ஹிந்தி)

தில் தடக்னே டூ (ஹிந்தி),Dil Dhadakne Do (Hindi)
  • தில் தடக்னே டூ (ஹிந்தி)
  • ரன்வீர் சிங்
  • அனுஷ்கா சர்மா
  • இயக்குனர்: ஜோயா அக்தர்
05 ஜூன், 2015 - 15:43 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » தில் தடக்னே டூ (ஹிந்தி)

டில்லியில் வாழும் பஞ்சாபி குடும்பம். கமால் மெஹ்ரா (அனில் கபூர்) மற்றும் அவரது மனைவி நீலம் (ஷெபாலி ஷா) தங்களது 30ம் ஆண்டு திருமண நாளை கொண்டாடும் பொருட்டு தங்களது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் உடன் ஐரோப்பாவிற்கு சொகுசு கப்பலில் சுற்றுலா செல்ல திட்டமிடுகின்றனர். தொழில்நிறுவனம் நடத்தி வந்த கமால், நிறுவனம் திடீரென்று திவால் ஆகிறது. இதன்பின் மனமுடைந்த நிலையில், அவருக்கு மனைவி நீலம் தான் ஆதரவாக இருக்கிறார். அந்நிலையில், மகள் ஆயிஷாவின் (பிரியங்கா சோப்ரா) திருமணமும் நடைபெறுவதாக இருந்தது இந்தநிலையில், ஆயிஷாவின் நண்பரும், முன்னாள் காதலருமான சன்னி கில் (பர்ஹான் அக்தர்) கேரக்டர் வருகிறது. நலிவடைந்த கமால் மெஹ்ராவின் தொழிலை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டுவரும் பொருட்டு, செல்வந்தர் குடும்பத்தில் இருந்து பெண்ணை எடுக்க கமாலின் மகன் கபீர் (ரன்வீர் சிங்) திட்டமிடுகிறார். இதனிடையே, அந்த சொகுசு கப்பலில் பயணித்த நிலையில் அங்கிருந்த பரா அலி (அனுஷ்கா சர்மா) மீது கபீர் காதல் வயப்படுகிறார். கமால், சரிவிலிருந்து மீண்டாரா?, பரா அலியை, கபீர் மணம்புரிந்தாரா? என்பது தான் படத்தின் மீதிக்கதை...


ஜோயா அக்தர் சிறந்த திறமையான இயக்குநர் என்றபோதிலும், தெளிவற்ற கதையமைப்பால், அவர் படத்தை இயக்குயதில் தோல்வியுற்றார் என்றே சொல்லவேண்டும். பக்குவமான இயக்குநர் என்றபோதிலும், பல இடங்களி்ல், இயக்குநர் படத்திலிருந்து விலகிச்சென்றுள்ளார். இருந்தபோதிலும் தில் தடக்னே டூ படம் சிறந்த படமாக வந்துள்ளதற்கு இயக்குநரின் சாமர்த்தியமே காரணம். ஜிந்தகி நா மிலேகி தோபரா படம் போல் இப்படம் வரவில்லை. படத்தின் கிளைமாக்ஸ் பெரிதாக சொல்லிக்கொள்ளும்படி இல்லை.


அனில் கபூர், தனக்கே உரிய தனித்துவ ஸ்டைலின் மூலம் படம் முழுவதும் வியாபித்துள்ளார். படத்தின் முதற்பாதி நிறைவுநிலையில், பர்ஹான் அக்தரின் என்ட்ரி, படத்திற்கு புது உத்வேகத்தை அளிக்கிறது. அனில் கபூரும், ரன்வீர் சிங்கும் போட்டி போட்டுக்கொண்டு நடித்துள்ளனர். இந்த படத்தில், பல்வேறு நட்சத்திரங்கள் இருந்தபோதிலும், அனில் கபூருக்கு அடுத்த முக்கியத்துவம், ரன்வீர் சிங்கிற்கு தரப்பட்டிருக்கிறது. ரன்வீர் சிங்கும் அதை சரியாக பயன்படுத்திக்கொண்டுள்ளார். சிட்டி பெண் கேரக்டரில் நடி்ததுள்ள பிரியங்கா சோப்ரா, பல இடங்களில் படத்தில் ஒட்டாமல் இருப்பது அப்பட்டமாக தெரிகிறது. அனுஷ்கா சர்மா சிறிதுநேரமே வந்தாலும், ரசிகர்களின் நெஞ்சங்களை கொள்ளை கொள்கிறார். ரன்வீர் சிங் - அனுஷ்கா இருவருக்குமிடையே கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க்அவுட் ஆகியுள்ளது. ஷெபாலி ஷாவின் கேரக்டர், படத்தின் பிற்பகுதியில் முக்கியமானதாக உள்ளது.


படம் சிறப்பாக இருக்கும்போதிலும், படத்தின் நீளம், படம் பார்ப்பவர்களின் பொறுமையை கொஞ்சம் அதிகமாக சோதித்துவிடுகிறது.



வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in