என் பெயரில் வரும் அழைப்புகள், மெசேஜ்கள் போலியானவை: தனுஷ் மானேஜர் அறிக்கை | பெண்களை இழிவாக பேசும் இயக்குனர்: திவ்யபாரதி புகார் | 'ஆரோமலே' படத்திற்கு எதிராக வழக்கு | பிளாஷ்பேக்: நடிகையின் பிரச்னையை பேசிய முதல் படம் | தமிழில் 4 ஆண்டுக்கு பின் நாயகியாக நடிக்கும் கல்யாணி பிரியதர்ஷன் | எனக்கு பாராட்டு விழா வேணாம்: தயாரிப்பாளர் தாணு | வீட்டை வைத்து கடன் வாங்கி படம் தயாரித்ததுஏன்? ஆண்ட்ரியா | 'வாழு, வாழ விடுங்கள்': கிண்டல், கேலிகளுக்கு கீர்த்தி சுரேஷ் பதில் | அஜித் அடுத்த பட அறிவிப்பு - தொடரும் தாமதம் | மீண்டும் தெலுங்கு இயக்குனர் படத்தில் சூர்யா ? |

தென்னிந்திய சினிமாவில் வேகமாக வளர்ந்து வரும் நடிகை ராஷ்மிகா. 3 கோடி வரை சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது. கூர்க்கை சேர்ந்த இவர் கிரிக் பார்ட்டி என்ற கன்னட படத்தின் மூலம் அறிமுகமானார். கீதா கோவிந்தம் படத்தின் மூலம் தெலுங்கில் பிரபலமானார். டியர் காமிரேட் டப்பிங் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார். இப்போது கார்த்தி ஜோடியாக சுல்தான் படத்தில் நடித்து வருகிறார். விஜய்யின் 65வது படத்தில் நடிக்க பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. சமீபத்தில் இவர் நடித்த கன்னட படமான பொகரு தமிழில் செமதிமிரு என்ற பெயரில் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில் மிஷன் மஜ்னு என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகிறார். இதில் அவர் சித்தார்த் மல்கோத்ரா ஜோடியாக நடிக்கிறார் . இது இந்திய ராணுவத்தில் நடந்த ஒரு நிகழ்வை மையமாக கொண்ட படம். இதில் நடிக்க ராஷ்மிகாவுக்கு படத்தின் இயக்குனர் சாந்தனு பகாச்சி பயிற்சி அளித்து வருகிறார். இந்த பயிற்சி கடந்த 2 மாதங்களாக நடந்து வருகிறது. தற்போது புஷ்பா, ஆடாலு மீக்கு ஜோஹரு படங்களில் நடித்து வரும் ராஷ்மிகா. இதன் இடைவெளியில் அடிக்கடி மும்பை சென்று நடிப்பு பயிற்சி பெற்று வருகிறார்.