பிரபாஸ் படத்திலிருந்து நீக்கப்பட்டாரா ராஷ்மிகா? | விஜய் சேதுபதி படத்தில் தபு : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | கண்ணப்பா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | 'ரெட்ரோ'வில் 90களின் காதல் கதை : கார்த்திக் சுப்பராஜ் தகவல் | பிளாஷ்பேக் : இளையராஜாவின் பாடலுக்காக உருவான படம் | சினிமா சங்கப் பிரச்னைகளில் அரசு தலையிட வேண்டும் : ஆர்கே செல்வமணி கோரிக்கை | உறுதியானது 'லியோ - குட் பேட் அக்லி' ஒற்றுமை | தனுஷ் - மாரி செல்வராஜ் கூட்டணி : மாறிய தயாரிப்பு நிறுவனம் | ஷங்கர் வழியில் எக்ஸ் தளத்தை 'ஆப்' செய்த ஏஆர் முருகதாஸ் | ஆளே இல்லாத வீட்டிற்கு ஒரு லட்சம் கரண்ட் பில் : கங்கனா ஏற்படுத்திய பரபரப்பு |
பாலிவுட்டின் பிரபல கூட்டணியான இயக்குனர் ரோஹித் ஷெட்டி, நடிகர் அக்ஷய் குமார் கூட்டணியில் உருவாகியிருக்கும் படம் 'சூர்யவன்ஷி'.. காத்ரீனா கைப் கதாநாயகியாக நடித்துள்ள இந்தப்படம் வரும் ஏப்-2ஆம் தேதி ரிலீஸாக இருக்கிறது. ஆனால் தற்போது அதன் ரிலீஸில் புதிய சிக்கல் ஒன்று எழுந்துள்ளது.
அதாவது இந்தப்படம் ஓடிடிக்கு கொடுக்கப்படாமல் நேரடியாக தியேட்டர்களிலேயே தான் வெளியாக இருக்கிறது. ஆனால் மல்டிபிளெக்ஸ் தியேட்டர்களில் இந்தப்படத்தை திரையிடுவதில் லாப சதவீதம் குறித்த பேச்சுவார்த்தையில் சுமுகமான தீர்வு எட்டப்படவில்லை. அதனால் பிவிஆர், ஐநாக்ஸ், கார்னிவல் போன்ற மல்டிபிளெக்ஸ் தியேட்டர்களில் சூர்யவன்ஷி ரிலீஸாகது என்று சொல்லப்படுகிறது.
அதேசமயம் ஒற்றை தியேட்டர்களில் இந்தப்படம் ரிலீஸாவதில் எந்த சிக்கலும் இல்லையாம். இப்படி பிரச்சனைக்கு தீர்வு காணாமல் படத்தை வெளியிட்டால், அது இருதரப்புக்குமே நட்டத்தையே ஏற்படுத்தும் என விநியோகஸ்தர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.