இளையராஜா வீட்டு மருமகள் ஆகி இருக்கணும்... : புது குண்டு போட்ட வனிதா, நடந்தது என்ன? | அனுபவசாலிகள் இல்லாத கட்சி வெற்றி பெறாது : சொல்கிறார் நடிகர் ரஜினி | ஷங்கரின் கனவுப்படம் 'வேள்பாரி' : தயாரிக்கப் போவது யார் ? | 'மோனிகா' பூஜாவை விட ரசிகர்களைக் கவர்ந்த சவுபின் ஷாகிர் | பிளாஷ்பேக் : அருக்காணியால் தயங்கிய பாக்யராஜ் | பிளாஷ்பேக் : அதிக சம்பளம் பெற்ற கதாசிரியர் | குரு பூர்ணிமாவில் அமிதாப் பச்சன் சிலையை வைத்து வழிபாடு | "நான்தான் பர்ஸ்ட்" என்ற ராஷ்மிகாவின் கருத்துக்கு எதிர்ப்பு | எனக்கு வராத சம்பளத்தை கொண்டு இரண்டு படங்கள் தயாரிக்கலாம்: கலையரசன் வருத்தம் | கதை நாயகியாக நடிக்கும் மிஷா கோஷல் |
பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே சமூக வலைதளங்களில் ஆக்டிவாக செயல்பட்டு வருபவர்.. 27.7 மில்லியன் பேர் டுவிட்டரிலும், 52.5 மில்லியன் பேர் இன்ஸ்டாகிராமிலும் அவரை பின் தொடர்கின்றனர். இந்தநிலையில் தற்போது தனது டுவிட்டர், இன்ஸ்டாகிராம் பக்கங்களில் இதுவரை தான் பதிவிட்டு வந்த புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் கருத்துக்களை அனைத்தையும் அதிரடியாக நீக்கியுள்ளார் தீபிகா படுகோனே.
முதலில் தீபிகாவின் சோஷியல் மீடியா கணக்குகளை யாரோ ஹேக் செய்துவிட்டனரோ என்றுதான் அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால் ஆடியோ குறிப்பு ஒன்றை பதிவிட்டுள்ள தீபிகா படுகோனே, தானேதான் அவற்றை அழித்துள்ளார் என்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள ஆடியோ குறிப்பில், “எல்லோருக்கும் வணக்கம்.. என்னுடைய எண்ணங்களையும் உணர்வுகளையும் பதிவு செய்துள்ள என்னுடைய ஆடியோ டைரிக்கு உங்களை வரவேற்கிறேன். என்னுடைய இந்த செயலை நீங்கள் அனைவரும் ஒப்புக்கொள்வீர்கள் என நம்புகிறேன்.. 2020ஆம் வருடம் அனைவருக்கும் நிலையில்லாத வருடமாக இருந்தாலும் .என்னை பொறுத்தவரை நன்றி மிகுந்ததாகவும் எனது இருப்பை வெளிப்படுத்த உதவுவதாகவும் அமைந்தது” என கூறியுள்ளார். ஆனாலும் தனது மொத்த பதிவுகளையும் நீக்கியதற்கான காரணத்தை அவர் குறிப்பிடவில்லை.